அகவிலைப்படியை உயர்த்தும் கர்நாடகாவின் முடிவால் ரூ 1,109 கோடி செலவு! ஊழியர்களுக்கு ஜாலி

DA Hike Update: லட்சக்கணக்கான ஊழியர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றிய அரசு! நீண்ட நாட்களுக்கு பிறகு அகவிலைப்படியை உயர்த்த முடிவெடுத்த கர்நாடக மாநில அரசு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 23, 2023, 09:11 AM IST
  • லட்சக்கணக்கான ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறியது
  • கோரிக்கையை நிறைவேற்றிய கர்நாடகா!
  • கர்நாடக மாநில அரசு முடிவு

Trending Photos

அகவிலைப்படியை உயர்த்தும் கர்நாடகாவின் முடிவால் ரூ 1,109 கோடி செலவு! ஊழியர்களுக்கு ஜாலி title=

7வது ஊதியக் குழு லேட்டஸ்ட் அப்டேட்:  மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ள நிலையில், கர்நாடக மாநில அரசும் லட்சக்கணக்கான ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. நீண்ட கால ஆலோசனைகளுக்குப் பிறகு கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மார்ச் மாதம் ஊழியர் சங்கங்கள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு, அடிப்படை சம்பளத்தில் 17% வரை இடைக்கால உயர்வு இருக்கும் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைப்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்கவும் அரசு அறிவித்தது.

நீண்ட நாட்களாக அகவிலைப்படி உயர்வு கோரி கர்நாடகா ஊழியர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். தற்போது கர்நாடக மாநில அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. அகவிலைப்படியை 3.75 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ள கர்நாடக மாநில அரசின் உத்தரவுக்குப் பிறகு, மாநிலத்தில் ஊழியர்களின் டிஏ 38.75 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னதாக அரசு ஊழியர்களின் டிஏ 35 சதவீதமாக இருந்தது. யுஜிசி/ஏஐசிடிஇ/ஐசிஏஆர் அளவிலான விரிவுரையாளர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு DA நான்கு சதவீதம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு ரூ.10288+10288+10288=30864 நிலுவைத் தொகை கிடைக்கும்.. எப்போது?

1,109 கோடி கூடுதல் சுமை

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை செயல்படுத்துவதால், கர்நாடக மாநில அரசுக்கு 1,109 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் சுமை ஏற்படும். மார்ச் மாதத்தில் ஊழியர் சங்கங்களின் போராட்டத்திற்குப் பிறகு, முந்தைய பாஜக அரசு அடிப்படை சம்பளத்தில் 17% வரை இடைக்கால உயர்வு பற்றி பேசியது.

இதற்குப் பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மறுசீரமைப்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைப்பதாகவும் அரசாங்கம் அறிவித்தது. நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

மேலும் படிக்க | எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வந்தாச்சி குட் நியூஸ்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

பழைய ஓய்வூதியத் திட்டம்
பாஜக ஆட்சியில் இல்லாத பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ/டிஆர் 4 சதவீதம் உயர்த்தப்பட்டது.

அகவிலைப்படியை உயர்த்திய பல்வேறு மாநிலங்கள்

மேலும், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, உத்தரப்பிரதேச அரசும் ஊழியர்களின் டிஏவை 4 சதவீதம் உயர்த்தியது. உயர்த்தப்பட்ட டிஏ தொகையை அக்டோபர் மாத சம்பளத்துடன் தீபாவளிக்கு முன் நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று உத்தரப்பிரதேச மாநில மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதத்தை எட்டியது. மத்திய ஊழியர்களுக்கு இன்னும் நல்ல செய்தி காத்திருக்கிறது. வரும் நாட்களில் இன்னும் அற்புதமான பரிசுகளைப் பெறுவார்கள் என்று ஊகிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ் வருது.. அகவிலைப்படியில் புதிய டுவிஸ்ட், இதோ அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News