7th Pay Commission: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்த முக்கிய அப்டேட், விரைவில் சம்பள உயர்வு?

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அரசு விரைவில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து முடிவெடுக்கக்கூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 27, 2022, 05:56 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஃபிட்மென்ட் ஃபேக்டரால் தீர்மானிக்கப்படுகிறது.
  • ஃபிட்மென்ட் ஃபேக்டர் அதிகரித்தால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயரும்.
  • இதனால் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும்.
7th Pay Commission: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்த முக்கிய அப்டேட், விரைவில் சம்பள உயர்வு?  title=

7வது சம்பள கமிஷன் ஃபிட்மென்ட் ஃபேக்டர் அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அரசு விரைவில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து முடிவெடுக்கக்கூடும். இதன் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் உயரும். இதற்கான வரைவு தயாரிக்கப்பட்டு, அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படும். ஃபிட்மென்ட் ஃபேக்டர் திருத்தம் குறித்த காத்திருப்பு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இது குறித்து ஒரு நல்ல செய்தியை பெற ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.  

எங்கள் கூட்டாளர் இணையதளமான ஜீ பிசினஸின் படி, இதற்கான வரைவைச் சமர்ப்பித்த பிறகு, ஜூலை மாத இறுதிக்குள் இந்தப் பிரச்சினை குறித்த கூட்டம் நடத்தப்படலாம். யூனியன் இந்த புதிய அப்டேட்டை கொடுத்துள்ளது. இது ஒப்புக் கொள்ளப்பட்டால், 52 லட்சத்துக்கும் அதிகமான மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளம், ஃபிட்மென்ட் ஃபேக்டரின் கீழ் உயர்த்தப்படலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஆகஸ்ட் மாதம் ஊழியர்களுக்கு கிடைக்கும் 4 பம்பர் செய்திகள் 

பணியாளர்களுக்கு பம்பர் சம்பள உயர்வு

ஆகஸ்ட் 1, 2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அகவிலைப்படி பொருந்தும். ஏஐசிபிஐ தரவுகளின்படி, ஆகஸ்ட் 1, 2022 முதல், அகவிலைப்படியில் 4 முதல் 5% அதிகரிப்பு இருக்கும். அதாவது அகவிலைப்படி 38 முதல் 39 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம். இதுவரை, மே வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் எண்கள் வந்துள்ளன. ஆனால், ஜூன் எண்களுக்குப் பிறகு, அகவிலைப்படி உயர்வை அரசு அறிவிக்கக்கூடும். இதற்கிடையில், ஃபிட்மென்ட் ஃபேக்டர் தொடர்பான கோரிக்கைக்கு அரசு ஒப்புக் கொண்டால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கும்.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் உயர்வு

7வது ஊதியக் குழுவில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஃபிட்மென்ட் ஃபேக்டரால் தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபிட்மென்ட் ஃபேக்டர் அதிகரித்தால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயரும். இந்த ஃபார்முலா காரணமாக, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் இரண்டரை மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. தற்போது, ​​ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.57 மடங்கு என்ற விகிதத்தில் உள்ளது. இதன் அடிப்படையில், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18000 ஆகவும், அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56900 ஆகவும் உள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியீடு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News