7th Pay Commission: ஆகஸ்ட் மாதம் ஊழியர்களுக்கு கிடைக்கும் 4 பம்பர் செய்திகள்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தி!! ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு 4 பம்பர் செய்திகள் கிடைக்கக்கூடும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 26, 2022, 04:11 PM IST
  • ஆகஸ்ட் மாதம் 4 பம்பர் செய்திகள்.
  • 18 மாத டிஏ ஏரியர் புதிய அப்டேட்.
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும்.
7th Pay Commission: ஆகஸ்ட் மாதம் ஊழியர்களுக்கு கிடைக்கும் 4 பம்பர் செய்திகள் title=

7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: வரும் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய பல செய்திகள் வரக்கூடும். ஏனெனில் மத்திய அரசு அளிக்கக்கூடிய நான்கு முக்கிய செய்திகளால் ஊழியர்கள் பயனடைய வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் வரக்கூடிய அறிவிப்புகளின் பட்டியல் இதோ. 

டிஏ உயர்வு: 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை பொறுத்த வரையில் நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் (டிஏ) 4 சதவீதம் உயர்வு கிடைக்கும். இது தற்போதுள்ள 34 சதவிகித அகவிலைப்படியை 38 சதவிகிதமாக அதிகரிக்கும். மே மாதத்திற்கான தொழில்துறை தொழிலாளர்களுக்கான (ஏஐசிபிஐ-ஐடபிள்யு) அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டால் அறிவிக்கப்பட்ட எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு இருக்கும். இருப்பினும், ஜூன் 2022 எண்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எண்கள் 31 ஜூலை 2022 அன்று அறிவிக்கப்படும். இதற்குப் பிறகு, அகவிலைப்படி உயர்வு குறித்து மேலும் தெளிவு கிடைக்கும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது இது குறித்து மேலும் தெளிவு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

18 மாத டிஏ ஏரியர் புதிய அப்டேட்: ஊழியர்களுக்கு எதிர்பாராத லாபம்

நீண்ட நாட்களாக ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் 18 மாத நிலுவைத் தொகை பற்றி அரசாங்கம் முடிவெடுக்க வாய்ப்புகள் உள்ளன. நிலுவைத் தொகை விவகாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான காலத்திற்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையை அரசாங்கம் முடக்கியுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக அரசாங்கத்தால் அகவிலைப்படி நிலுவை முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் சங்கம் நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி வருகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியீடு

நிலுவையில் உள்ள தொகை குறிப்பிடத்தக்க அளவு இருப்பதால், ஓய்வூதியம் பெறுவோர், தங்களின் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தொழிற்சங்கம் கருதுகிறது. இந்த சந்திப்பின் போது இது குறித்து ஏதாவது அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

7வது சம்பள கமிஷன்: ஃபிட்மென்ட் பேக்டருக்கான கோரிக்கை பற்றிய விவாதம்

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தங்களது ஃபிட்மென்ட் பேக்டரை தற்போதைய 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து விவாதம் நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான விவாதம் ஆகஸ்ட் மாத இறுதியில் அமைச்சரவை செயலாளருடன் நடைபெறலாம். இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும். ஃபிட்மென்ட் பேக்டர் உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் ஊதியத்தில் குறைந்தபட்சம் ரூ.8000 அதிகரிக்கும்.

8வது ஊதியக் குழு பற்றிய விவாதம்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் தற்போது நடைமுறையில் உள்ள 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை விட குறைவாகவே சம்பளம் வாங்குவதாக கூறி வருகின்றனர். அவர்கள் சம்பளக் கூறுகளிலிருந்து பயனடைந்தாலும், குறைந்த தொகையைப் பெறுகிறார்கள்.

தற்போது குறைந்த அடிப்படை சம்பளம் ரூ.18000 ஆக உள்ளது. இந்த அடிப்படை ஊதியத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கு பெரும் பங்கு உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தங்களது ஃபிட்மென்ட் ஃபாக்டரை தற்போதைய 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த உயர்வு நடந்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும். 8வது ஊதியக் குழுவைச் சுற்றியே தற்போது பெரும் பரபரப்பு நிலவுகிறது.

மேலும் படிக்க | 8th Pay Commission: ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News