7th Pay Commission: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? அறிவிப்பு எப்போது?

7th Pay Commission: ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பம்பர் செய்திகள் காத்திருக்கின்றன. ஊழியர்களின் சம்பளம் 40 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 19, 2022, 06:34 PM IST
  • மத்திய பணியாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த தருணம் வந்துவிட்டது.
  • ஏ.ஐ.சி.பி.ஐ-யின் தரவுகளிலிருந்து, ஊழியர்களின் அகவிலைப்படியில் நல்ல அதிகரிப்பு இருக்கும் என்பதை கணிக்க முடிகின்றது.
  • ஆகஸ்ட் 3 ஆம் தேதி பல முடிவுகள் எடுக்கப்படக்கூடும்.
7th Pay Commission: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? அறிவிப்பு எப்போது? title=

7வது ஊதியக் கமிஷன்: மத்திய பணியாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த தருணம் வந்துவிட்டது. ஊழியர்களின் சம்பளம் 40 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது. ஏ.ஐ.சி.பி.ஐ-யின் தரவுகளிலிருந்து, ஊழியர்களின் அகவிலைப்படியில் நல்ல அதிகரிப்பு இருக்கும் என்பதை கணிக்க முடிகின்றது. ஆனால் இது குறித்த அறிவிப்பு எப்போது வெளிவரும் என்பது இன்னும் தெரியவில்லை. இதுவரை வெளிவந்துள்ள ஏஐசிபிஐ தரவுகளின்படி, அகவிலைப்படியில் 5% முதல் 6% வரை உயர்வு இருக்கும் என்பது தெளிவாகிறது. 

ஆகஸ்ட் 3 ஆம் தேதி பல முடிவுகள் எடுக்கப்படக்கூடும்: 

ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து அரசு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்தக் கூட்டத்தில், இது தவிர ஊழியர்களின் சம்பளம் குறித்த பிற அப்டேட்களும் வரக்கூடும். இக்கூட்டத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிகரிப்பு குறித்த அறிவிப்பிற்கான வாய்ப்பும் உள்ளது. இது தவிர, 18 மாத டிஏ பாக்கி குறித்தும் முடிவு எடுக்கப்படலாம்.

மேலும் படிக்க | 8th Pay Commission எப்போது? மத்திய அரசுக்கு மகஜர் கொடுக்கும் ஊழியர் சங்கங்கள் 

18 மாதங்களாக நிலுவையில் உள்ளது அரியர் தொகை

2021ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 7வது ஊதியக் குழுவின் கீழ், அகவிலைப்படி 11 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 2021ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. ஜனவரி 2020, ஜூன் 2020, ஜனவரி 2021க்கான அகவிலைப்படியானது கொரோனா காரணமாக முடக்கப்பட்டு, பின்னர் முடக்கம் நீக்கப்பட்டது. ஆனால் இந்த காலகட்டத்தின், அதாவது 18 மாத டிஏ பாக்கி இன்னும் ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை. 

சம்பளம் எவ்வளவு உயரும்?

எங்களது இணை இணையதளமான ஜீ பிசினஸ்ஸ்ன் படி, ஆகஸ்ட் 3 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் உள்ளது. அதில் அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கப்படலாம். அரசு 6% அகவிலைப்படியை உயர்த்தினால், மத்திய அரசு ஊழியர்களின் டிஎ அகவிலைப்படி 34% லிருந்து 40% ஆக உயரும். அந்த நிலையில், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் எவ்வளவு உயர்வு இருக்கும் என்று இங்கே காணலாம். 

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி  (40%) - ரூ.22,760/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.19,346/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 22,760-19,346 = ரூ 3,414/மாதம் 
5. ஆண்டு ஊதிய உயர்வு - 3,414 X12 = ரூ 40,968

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (40%) - ரூ.7,200/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 7200-6120 = ரூ.1080/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 1080 X12 = ரூ 12,960

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ நிலுவைத் தொகை பற்றிய முக்கிய அப்டேட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News