8th Pay Commission விரைவில்? 50% -ஐ தாண்டும் அகவிலைப்படி.. குஷியோடு காத்திருகும் ஊழியர்கள்

8th Pay Commission: ஜனவரி 2024 -க்குள், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதங்கள் 50 சதவிகிதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 2, 2023, 12:47 PM IST
  • 8வது சம்பள கமிஷன், சமீபத்திய அப்டேட்.
  • அகவிலைபப்டி 50% -ஐ எட்டினால் ஊதிய திருத்தம் செய்யப்பட வேண்டும்.
  • ஊதிய திருத்தம் செய்ய புதிய ஊதியக்குழுவை அமைக்க வேண்டும்.
8th Pay Commission விரைவில்? 50% -ஐ தாண்டும் அகவிலைப்படி.. குஷியோடு காத்திருகும் ஊழியர்கள் title=

8வது சம்பள கமிஷன், சமீபத்திய அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிக முக்கியமான செய்தி உள்ளது. அவர்களுக்கு வரும் மாதங்களில் பல முக்கிய செய்திகள் காத்திருக்கின்றன. அகவிலைப்படி அதிகரிப்பு, அகவிலைபப்டி அரியர் தொகை, 8 ஆவது ஊதியக்குழு, ஜனவரி 2024 -க்கான டிஏ உயர்வு என வரிசையாக பல செய்திகளை ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஜனவரி 2024 -க்குள், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதங்கள் 50 சதவிகிதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையே டிஏ விகிதத்தை நிர்ணயிக்கிறது. 

பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க, வரும் மாதங்களில் ஊழியர்களுக்கான அகவிலைபப்டி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் அடிப்படை ஊதியத்தில் 50% அல்லது அதற்கு மேல் போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும்போது ஊதியத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் முந்தைய ஊதியக் குழு பரிந்துரைத்திருந்தது. இதனால் 8வது ஊதியக் குழுவை உருவாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

8வது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் தற்போது இல்லை: நிதி அமைச்சகம்

தற்போது எட்டாவது ஊதியக் குழுவை (8th Pay Commission) அமைக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்யுள்ளது. ஜூலை 25, 2023 அன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, "அத்தகைய திட்டம் எதுவும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை" என்று கூறினார். ஒரு உறுப்பினரின் கேள்விக்கு சவுத்ரி பதிலளித்தார். " DA/DR விகிதம் 50 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, அத்தகைய சூழ்நிலையில், எட்டாவது மத்திய ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளதா?" என அந்த ஊறுப்பினர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அதை பற்றி தற்போது அரசு பரிசீலிக்கவில்லை என்று கூறினார். 

எனினும், இது நடந்து சில வாரங்கள் கடந்துவுட்டன. இப்போது அரசின் நிலைப்பாடு மாறி இருக்கலாம் என்றும், இது குறித்து அதிகம் வெளிப்படுத்தாமல் இதற்கான நடனடிக்கைகளை அரசு துவக்கி இருக்கலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சில காரணங்களும் உள்ளன. ஏழாவது ஊதியக் குழுவின் உருவாக்கத்துடன், அகவிலைப்படியை திருத்துவதற்கான விதிகளை அரசாங்கம் மாற்றியது. இதன் படி அகவிலைப்படி (DA Hike) 50 சதவீதத்தை எட்டும்போது, ​​அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். இதற்குப் பிறகு, அப்போதுள்ள அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீத டிஏ சேர்க்கப்பட்டு, அகவிலைப்படி கணக்கீடு பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும். அகவிலைபப்டி 50% -ஐ எட்டினால் ஊதிய திருத்தம் செய்யப்பட வேண்டும். ஊதிய திருத்தம் செய்ய புதிய ஊதியக்குழுவை அமைக்க வேண்டும்.

மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு டபுள் குட் நியூஸ்.. டிஏ உயர்வு, இந்த தேதியில் பெரும் பரிசு

மேலும், அடுத்த ஆண்டும் நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. ஆகையால், மத்திய அரசு ஊழியர்களை மகிழ்விக்க, தேர்தல்களுக்கு முன் அரசு 8வது ஊதியக்குழு அமைப்பது குறித்து அறிவிக்கலாம். ஏனெனில், சம்பளத் திருத்தம் செய்ய வேண்டுமானால், அதற்கு புதிய ஊதியக்குழு அமைப்பது அவசியமாகும்.  

பணவீக்கதை சமாளிக்கவும், தினம் தினம் அதிகரிக்கும் விலைவாசிக்கு ஈடுகொடுக்கவும், மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) அளிக்கப்படுகின்றது. இவற்றில் செய்யப்படும் அதிகரிப்பு அவர்களுக்கு ஏற்படும் பற்றாக்குறையை ஈடுசெய்ய வழங்கப்படுகிறது. ஜனவரி 2023 இல், இந்த விகிதங்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டன. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICCIP-IW) அடிப்படையில் DA/DR விகிதங்கள் அவ்வப்போது மாற்றப்படுகின்றன.

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய மேட்ரிக்ஸ்

ஏழாவது மத்திய ஊதியக் குழு (7th Pay Commission) அறிக்கையின் பாரா 1.22 இல், மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய மேட்ரிக்ஸை அவ்வப்போது மறுபரிசீலனை செய்யலாம் என்று பரிந்துரைக்கிறது. எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பது குறித்து பரிசீலித்து வரவில்லை என அரசாங்கம் சபையில் தெரிவித்தது. எனினும், தற்போது உள்ள அரசியல் சூழல் மற்றும் அகவிலைப்படி அளவை பார்க்கும்போது அடுத்த ஊதியக்குழு விரைவில் அமைக்கப்படும் என்றே தெரிவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். 

மேலும் படிக்க | 8th Pay Commission: 44% ஊதிய உயர்வு... புதிய சூத்திரத்துடன் வருகிறதா புதிய ஊதியக்குழு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News