ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: 50% அகவிலைப்படி.. தொடர்ந்து 8வது ஊதியக்கமிஷனா?

8th Pay Commission: மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு (DA Hike) மட்டுமின்றி, இப்போது அவர்களின் சம்பளமும் அதிகரிக்கப் போகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 2, 2024, 08:59 PM IST
  • மத்திய ஊழியர்களின் சம்பளம் 9000 ரூபாய் அதிகரிக்கும்.
  • 8th Pay Commission: அடிப்படை சம்பளம் எப்படி உயரும்?
  • 8வது ஊதியக்குழு எப்போது வரலாம்?.
ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: 50% அகவிலைப்படி.. தொடர்ந்து 8வது ஊதியக்கமிஷனா?

7வது ஊதியக்குழு, சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பல நல்ல செய்திகள் வந்த வண்னம் உள்ளன. ஜனவரி 2024 முதல் ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவிகிதமாக உயரும் என்பது உறுதியாகிவிட்டது. சமீபத்தில் வெளியான டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டிலிருந்து (AICPI Index) இது தெளிவாகியுள்ளது. எனினும் இதற்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் தான் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Add Zee News as a Preferred Source

இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு செய்தியும் உள்ளது. மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு (DA Hike) மட்டுமின்றி, இப்போது அவர்களின் சம்பளமும் அதிகரிக்கப் போகிறது. அகவிலைப்படி அதிகரிப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும். ஒரே முறையில் ஊழியர்களின் சம்பளம் ரூ.9,000 உயரும். 

ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான விதி என்ன?

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance), ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படுகிறது. தற்போது மத்திய ஊழியர்களுக்கு 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரி 2024 முதல், அகவிலைப்படி 50 சதவீதமாக உயரும். அதன் பிறகு, விதிகளின்படி, அகவிலைப்படி பூஜ்ஜியமாகிவிடும். 7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்திரைகளின் படி, அகவிலைப்படி 50% -ஐ எட்டும்போது அது மீண்டும் பூஜ்ஜியமாக்கப்படும். அதன் பின்னர் மீண்டும் அகவிலைப்படி கணக்கீடு 1%, 2%, 3% என தொடங்கும். 50% அகவிலைப்படியின் தொகை அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். 

8th Pay Commission: அடிப்படை சம்பளம் எப்படி உயரும்?

அகவிலப்படி 50 சதவிகிதத்தை எட்டினால், அடிப்படை சம்பளம் (Basic Salary) உயரும். 2016 ஆம் ஆண்டில் 7வது ஊதியக் குழுவை அரசு அமல்படுத்தியபோது, ​​அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது. கணக்கீடுகளுக்கு புதிய அடிப்படை ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. பூஜ்ஜிய அகவிலைப்படியின் காரணமாக, ஊழியர்களுக்கு (Central Government Employees) முந்தைய அகவிலைப்படி அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்பட்ட பலன் கிடைத்தது. இப்போது மீண்டும் அதுபோன்று நடக்கப் போகிறது. அகவிலைப்படியை மீண்டும் அடிப்படை சம்பளத்துடன் இணைத்து சம்பளத்தை உயர்த்தும் திட்டம் உள்ளது. ஆனால், அடிப்படை சம்பளத்தில் திருத்தம் ஏற்பட்டால், அடுத்த ஊதியக்குழுவை அமைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதன் படி பார்த்தால் இப்போது 8வது ஊதியக்குழு அமைக்கப்பட வேண்டும். 

மேலும் படிக்க | CIBIL Score: கிரெடிட் கார்டினால் சிபில் ஸ்கோர் பாதிக்காமல் இருக்க!

மத்திய ஊழியர்களின் சம்பளம் 9000 ரூபாய் அதிகரிக்கும்

தற்போது, ​​பே-பெட் லெவல்-1ல் அடிப்படை சம்பளம் ரூ.18000 ஆக உள்ளது. இது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம். அதன் கணக்கீட்டைப் பார்த்தால், தற்போது அகவிலைப்படியாகக் கிடைக்கும் மொத்தத் தொகை ரூ.7560. ஆனால், அதே கணக்கீட்டில் 50 சதவீத அகவிலைப்படியைப் பார்த்தால், ஊழியர்களுக்கு ரூ.9000 கிடைக்கும். அகவிலைப்படி 50 சதவீதம் ஆனவுடன் அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டு அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அதாவது ரூ.18000 சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ரூ.9000 அதிகரித்து மொத்த சம்பளம் ரூ.27000 ஆக உயரும்.  இதற்குப் பிறகு ரூ.27000 -இல் அகவிலைப்படி கணக்கிடப்படும். அகவிலைப்படி 0 ஆன பிறகு டிஏ 3% அதிகரித்தால், ஊழியர்களின் சம்பளம் மாதம் 810 ரூபாய் அதிகரிக்கும்.

மத்திய ஊழியர்களுக்கு எப்போது இந்த பரிசுகள் கிடைக்கும்?

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக உள்ளது. அகவிலைப்படி 4% அதிகரித்தவுடன் மொத்த அகவிலைப்படி 50% ஆக உயரும். எனினும், இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

8வது ஊதியக்குழு எப்போது வரலாம்?

8வது ஊதியக் குழு 2024 ஆம் ஆண்டில் அமைக்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டு இது அமைக்கப்பட்டால், ஒன்றரை ஆண்டுகளுக்குள் இது செயல்படுத்தப்படும். இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். 7வது ஊதியக் குழுவுடன் ஒப்பிடும்போது 8வது ஊதியக் குழுவில் பல மாற்றங்கள் இருக்கலாம். ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் (Fitment Factor) சில மாற்றங்கள் இருக்கலாம். இப்போது வரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுவை அரசு அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம்! ‘இந்த’ வியாபாரத்தை செய்து பாருங்கள்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News