விழாக்காலத்தில் உள்ளூர் கடைகளுக்கு Amazon India அளிக்கும் அரிய வாய்ப்பு

20,000 க்கும் மேற்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள், மளிகை மற்றும் உள்ளூர் கடைக்காரர்கள் முதன்முறையாக 'Great Indian Festival’-ல் பங்கேற்பார்கள் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2020, 05:21 PM IST
  • திருவிழா கால விற்பனையில், அமேசான் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் கடைகளை தன்னுடன் இணைக்கப் போகிறது.
  • நிறுவனம் இன்று இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளது.
  • அண்மையில் அமேசானின் போட்டியாளர் நிறுவனமான Flipkart, 50 ஆயிரம் மளிகைக் கடைகளை தன்னுடன் இணைத்தது.
விழாக்காலத்தில் உள்ளூர் கடைகளுக்கு Amazon India அளிக்கும் அரிய வாய்ப்பு  title=

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா, இந்த திருவிழா காலத்தில், பல மளிகைக்கடைகள் மற்றும் பிற கடைகளுக்கு பணம் சம்பாதிப்பதற்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பை அளிக்கப்போகிறது. இந்த ஆண்டு திருவிழா கால விற்பனையில், நிறுவனம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் தெருக் கடைகளை தன்னுடன் இணைக்கப் போகிறது.

ALSO READ: ஒரு நாளைக்கு 30 ரூபாய் சேமித்து கோடீஸ்வரராகும் Formula இதுதான்!!

பி.டி.ஐயின் செய்தியின்படி, நிறுவனம் இன்று இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளது. அமேசான் இந்தியா 'அமேசான் ஈஸி ஸ்டோர்ஸ்', 'ஐ ஹேவ் ஸ்பேஸ்' மற்றும் 'அமேசான் பே ஸ்மார்ட் ஸ்டோர்' என்ற பிற திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

தனித்தனி பிரச்சாரங்கள் மூலம் இந்த கடைகள் இணைக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 20,000 க்கும் மேற்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள், மளிகை மற்றும் உள்ளூர் கடைக்காரர்கள் முதன்முறையாக 'Great Indian Festival’-ல் பங்கேற்பார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் அன்றாட பொருட்கள், பெரிய உபகரணங்கள் மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்வார்கள்.

இந்த வடிவமைப்பின் மூலம் கடை உரிமையாளர்கள் டிஜிட்டல் இருப்பை உள்ளிடவும், அவர்களின் வரம்பை அதிகரிக்கவும் முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கும் தங்கள் நகரங்களில் உள்ள உள்ளூர் கடைகளில் இருந்து ஷாப்பிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.

இதுவரை, 400 நகரங்களில் இருந்து 20,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். மீரட், லூதியானா, சஹாரன்பூர், சூரத், இந்தூர், எர்ணாகுளம் மற்றும் காஞ்சிபுரம் நகரங்கள் இதில் அடங்கும். விற்பனையாளர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் முதல் 10 நகரங்களுக்கு வெளியே உள்ளவர்கள்.

அமேசான் இந்தியா (Amazon India) துணைத் தலைவர் மணீஷ் திவாரி கூறுகையில், இந்த பண்டிகை காலங்களில், எங்கள் விற்பனையாளர்கள் மற்றும் பிற MSME கூட்டாளர்கள் தங்கள் வணிகத்தை வளர்க்கவும், சமீபத்திய சவால்களை சமாளிக்கவும் உதவுவதில் கவனம் செலுத்துகிறோம் என்றார்.

அண்மையில் அமேசானின் போட்டியாளர் நிறுவனமான Flipkart, வரவிருக்கும் திருவிழா காலத்திற்கு முன்னர், 50 ஆயிரம் மளிகைக் கடைகளை இணைத்து அதன் விநியோகச் சங்கிலி மற்றும் விநியோக திறனை வலுப்படுத்தவிருப்பதாகக் கூறியது. இந்த புதிய நடவடிக்கையின் மூலம், 850 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை எளிதாக வழங்குவதில் வெற்றியடைந்ததாகவும் நிறுவனம் தெரிவித்தது. 

ALSO READ: SBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News