ரேஷன் கார்டுதாரர்களுக்கு லாட்டரி, இனி இலவச ரேஷனுடன் பணமும் கிடைக்கும்

Free Ration Card Update: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இனி இலவச ரேஷனுடன் உங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பணமும் கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 17, 2023, 06:39 AM IST
  • இனி 250 ரூபாய்க்கு பதிலாக 300 ரூபாய் அதிகரிக்கலாம்.
  • கார்டுதாரர்களுக்கு இலவச கோதுமை மற்றும் அரிசி.
  • இந்த ஆண்டு (டிசம்பர்) முழுவதும் இலவச ரேஷனை பெற முடியும்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு லாட்டரி, இனி இலவச ரேஷனுடன் பணமும் கிடைக்கும் title=

ரேஷன் கார்டு அப்டேட்: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இப்போது இலவச ரேஷனுடன் உங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பணமும் வழங்கப்படும். ஆம்... கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் அவ்வப்போது பல வசதிகள் செய்து தரப்படுகிறது. அந்தவகையில் தற்போது இனி வரும் நாட்களில் அரசாங்கம் உங்களின் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யும், ஆனால் இந்த பலன் சில ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அவற்றில் நீங்களும் வருவீர்களா என்பதை இந்த கட்டுரையை படித்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

முன்னதாக கடுகு எண்ணெய் இலவசமாகக் வழங்கப்பட்டது
மத்திய அரசுடன், தற்போது மாநில அரசும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. சமீபத்தில், ஹரியானா அரசு பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களுக்கும், அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கும் (AAY) இரண்டு லிட்டர் கடுகு எண்ணெயை இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ரயில்வேயின் சூப்பர் டூப்பர் டூர் பிளான்..! தென்னிந்தியாவை சுற்றி பார்க்க வாய்ப்பு

அரசாங்கம் 250 ரூபாய் வங்கிக் கணக்கில் அனுப்பியது
இது தவிர, ஜூன் 2021 ஆம் ஆண்டில் எண்ணெய் விலை உயர்வால், எண்ணெய் வினியோகத்தை நிறுத்திய அரசு, அதற்கு பதிலாக, கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 250 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த தொகையை உயர்த்த மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

எவ்வளவு தொகை உயர்வு?
இந்த நிலையில் தற்போது மாநில அரசு இந்த 250 ரூபாயை அதிகரிக்க யோசித்து வருகிறது. இந்த தொகையை அதிகரிக்க ஹரியானா அரசு தற்போது முடிவு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இனி 250 ரூபாய்க்கு பதிலாக 300 ரூபாய் அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. மாநில அரசின் இந்த மாற்றத்தின் பலனை வறுமைக் கோட்டிற்கு கீழே (பிபிஎல்) மற்றும் அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்கள் (ஏஏஒய்) மட்டுமே பெறுவார்கள். மேலும் இந்த மாற்றத்தால் சுமார் 32 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.

2023 இறுதி வரை இலவச ரேஷன் கிடைக்கும்
கொரோனா காலத்தில் நாட்டு மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் வசதியை அரசாங்கம் தொடங்கியது. அதன் பிறகு நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் இலவச ரேஷனின் பலனைப் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு முழுவதும் அதாவது 2023ஆம் ஆண்டில் இலவச ரேஷன் வசதியின் பலனை தொடர்ந்து பெறலாம் என்று முன்னதாக அரசு அறிவித்து இருந்தது. அந்த வகையில் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கும் வசதியும் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த வசதியானது (இலவச ரேஷன்) 2023 ஆம் ஆண்டிலும், வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, அதாவது நீங்கள் இந்த ஆண்டு (டிசம்பர்) முழுவதும் இலவச ரேஷனை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநிலத்தில் ரேஷனில் புதிய பொருள்
இதற்கிடையில் ரேஷன் பொருட்களில் கூடுதலாக மற்றொரு பொருளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கூடிய விரைவில் நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கொடுக்கப்படலாம் என்று கூறப்பட்டு வருகின்றது. 

மேலும் படிக்க | வரி செலுத்துவோருக்கு முக்கிய அப்டேட்: ITR 2 ஆஃப்லைன் படிவங்களை வெளியிட்டது வருமான வரித்துறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News