இனி ஒவ்வொரு ஆண்டும் 2 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக பெறலாம்: அரசு அறிவிப்பு

குஜராத் அரசு தீபாவளிக்கு முன்னதாக CNG மற்றும் PNG மீதான வாட் வரியை 10 சதவீதம் குறைத்துள்ளது. இது தவிர, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக வழங்குவது குறித்து அரசு தெரிவித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 18, 2022, 10:46 AM IST
  • அரசின் தீபாவளி பரிசு
  • சிஎன்ஜி-பிஎன்ஜியும் விலை குறைப்பு
  • 2 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசம்
இனி ஒவ்வொரு ஆண்டும் 2 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக பெறலாம்: அரசு அறிவிப்பு title=

இலவச எல்பிஜி சிலிண்டர்கள்: தீபாவளிக்கு முன்னதாக, குஜராத்தில் வசிக்கும் மக்களுக்கு குஜராத் அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. குஜராத் அரசு அளித்துள்ள பரிசால் கோடிக்கணக்கான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி குஜராத் அரசு தீபாவளிக்கு முன் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி மீதான வாட் வரியை 10 சதவீதம் குறைத்தது. இது தவிர, உஜ்வாலா திட்டத்தின் கீழ் 38 லட்சம் பயனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது.

அரசின் மீது 1,650 கோடி ரூபாய் சுமை அதிகரிக்கும்
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிஎன்ஜி, வீட்டில் வழங்கப்படும் குழாய் கேஸ் மீதான வாட் வரி குறைப்பு மற்றும் இரண்டு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்குவதால், மாநில அரசுக்கு ரூ.1,650 கோடி கூடுதல் செலவாகும். இருப்பினும் தற்போது குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!

வாட் வரி 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது
குஜராத் அமைச்சர் ஜிது வகானி கூறுகையில், “சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி மீதான வாட் வரியை 10 சதவீதம் அரசு குறைத்துள்ளது. இது இல்லத்தரசி பெண்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு உதவும். முன்னதாக குஜராத்தில், சமையலறையில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி மீதான வாட் 15 சதவீதம் என்று இருந்தது. ஆனால் தற்போது இந்த மாற்றத்திற்கு பிறகு வாட் வரி 5 சதவீதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.6ம், பிஎன்ஜி விலை கன மீட்டருக்கு ரூ.5ம் குறையும் என்றார். இதன் காரணமாக இனிவரும் காலங்களில் மக்கள் செலுத்தும் பணத்தில் பெரும் வித்தியாசம் காணப்படும்.

மேலும் படிக்க | mAadhaar பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News