இந்தியா சட்டங்களை மதித்தால் தான் இந்தியாவில் இடம்: Twitter, FB-க்கு எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் மூலம் போலி செய்திகள் பரப்பப்பட்டல், வன்முறைகளை தூண்ட முயற்சி மேற்கொண்டால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு வியாழக்கிழமை மாநிலங்களவையில் திட்டவட்டமாகக் கூறியது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 11, 2021, 03:58 PM IST
  • விவசாயிகளின் போராட்டத்தை தூண்டும் வகையிலான ட்வீட்களை அகற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
  • ட்விட்டர் மிகவும் தாமதமாக உத்தரவுக்கு இணங்குவது குறித்து இந்திய அரசு புதன்கிழமை அதிருப்தி தெரிவித்தது.
  • குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில், செங்கோட்டையில், காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது.
இந்தியா சட்டங்களை மதித்தால் தான் இந்தியாவில் இடம்: Twitter, FB-க்கு எச்சரிக்கை title=

இந்திய சட்டங்களை மதிப்பவற்கே, இந்தியாவில் இடம்  என அரசு டிவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு தெளிவான செய்தியை கொடுத்துள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் போலி செய்திகள் பரப்பப்பட்டால், வன்முறைகளை தூண்ட முயற்சி மேற்கொண்டால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு வியாழக்கிழமை மாநிலங்களவையில் திட்டவட்டமாகக் கூறியது.

"பேச்சு சுதந்திரம் நிச்சயம் உண்டு, ஆனால் இது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என 19 ஏ பிரிவு கூறுகிறதுய் " என்று தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

"நாங்கள் சமூக ஊடகங்களை (Social Media) மிகவும் மதிக்கிறோம், அது பொது மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் சமூக ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு. இருப்பினும், போலி செய்திகளையும் வன்முறையையும் பரப்புவதற்கு சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், சமூகத்தை  நடவடிக்கை எடுக்கப்படும் "என்று பிரசாத் கூறினார்.

ALSO READ | மத்திய அரசின் எச்சரிக்கை நோட்டீஸ் எதிரொலி... சரி பேசலாம் என்கிறது ட்விட்டர்..!!

அனைத்து சமூக ஊடக தளங்களும் இந்திய அரசியலமைப்பை கடைபிடிக்க வேண்டும் என்றார். இந்திய அரசியலமைப்பு அரசாங்கத்தையும் பிரதமரையும் விமர்சிக்க நிச்சயம் அனுமதிக்கிறது, ஆனால் போலி செய்திகளை பரப்புவது அனுமதிக்கப்படாது, என்றார்.

அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், " சமூக ஊடகங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்ய விரும்பினால் இந்திய சட்டங்களை மதிக்க  வேண்டும்” என்றார்.

விவசாயிகளின் போராட்டத்தை (Farmers Protest)  தூண்டும் வகையிலான ட்வீட்களை அகற்றுவதற்கான உத்தரவுக்கு பின்னரும்,  ட்விட்டர் மிகவும் தாமதமாக உத்தரவுக்கு இணங்குவது குறித்து இந்திய அரசு புதன்கிழமை அதிருப்தி தெரிவித்தது

இது குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அஜய் பிரகாஷ் சாவ்னி ட்விட்டரின் நிர்வாகத்திற்கு மத்திய அரசின் அதிருப்தியை தெரிவித்தார்.இந்தியாவில் அதன் அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் எல்லாவற்றையும் விட மிக உயர்ந்தவை என்றும் அவர் ட்விட்டரிடம் தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டம் வன்முறை போராட்டமாக மாறி, நாட்டிற்கே அவமானத்தை தேடித் தரும் வகையில், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில், செங்கோட்டையில்,  காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது.

விவாசாயிகள் போராட்டத்தை தூண்டி விடும் வகையிலான பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுடன் தொடர்புள்ள 1178  டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திடம் அரசு கூறியது. விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி, அதன் மூலம் விவாசாயிகள் போராட்டத்தை (Farmers Protest), இந்த கணக்குகள் வேலை செய்வதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. 

ALSO READ | பாகிஸ்தான் காலிஸ்தான் தொடர்புள்ள 1178 டுவிட்டர் கணக்குகளை முடக்கவும்: மத்திய அரசு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News