ஊழியர்களின் PF மீதான வட்டி அதிகரிப்பு பற்றிய முக்கிய அப்டேட்!

பொது வருங்கால வைப்பு நிதி (7.10 சதவீதம்), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (7.40 சதவீதம்) மற்றும் சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் (7.60 சதவீதம்) போன்ற திட்டங்களை விட இபிஎஃப் வட்டி விகிதம் அதிகம்.  

Written by - RK Spark | Last Updated : Oct 12, 2022, 06:58 AM IST
  • PF வட்டி விகிதம் உயர்த்துவது குறித்த பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
  • வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று அரசு விளக்கம்.
  • சிறுசேமிப்பு திட்டங்களை ஏற்கனவே வட்டி அதிகமாக உள்ளதாக விளக்கம்.
ஊழியர்களின் PF மீதான வட்டி அதிகரிப்பு பற்றிய முக்கிய அப்டேட்! title=

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த செய்திகள் வெளியாகி எப்படி சந்தோஷப்படுத்தியதோ, அதேபோல அடிக்கடி பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் செய்திகள் வெளியாகி வருகிறது.  இந்நிலையில் தற்போது அரசு தரப்பிலிருந்து பிஎஃப் கணக்கிற்கான வட்டி விகிதம் உயர்த்துவது குறித்த பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. மாநிலங்களவையில் பிஎஃப் வட்டி உயர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஷ்வர் டெலி, 2021-2022 நிதியாண்டுக்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | ஒரே போனில் இரண்டு வாட்ஸ்சப் பயன்படுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை!

 

ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க அரசாங்கம் எதுவும் மறுபரிசீலனை செய்கிறதா என்று சபையில் ராமேஷ்வர் டெலியிடம் கேட்கப்பட்டதற்கு, வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.  இதன்மூலம் பிஎஃப் கணக்கின் வட்டி விகிதத்தில் உயர்வு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.  மேலும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி கூறுகையில், பொது வருங்கால வைப்பு நிதி (7.10 சதவீதம்), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (7.40 சதவீதம்) மற்றும் சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் (7.60 சதவீதம்) போன்ற திட்டங்களை விட இபிஎஃப் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார்.  

இதுபோன்ற சிறுசேமிப்பு திட்டங்களில் கிடைக்கும் வட்டியை காட்டிலும் பிஎஃப் மீதான வட்டி அதிகமாக இருப்பதால் அரசு மேலும் வட்டி விகிதத்தை உயர்த்தாது.  அரசின் உத்தரவுப்படி பிஎஃப் மீதான வட்டி 8.10 % கிடைக்கிறது.  ஈபிஎஃப் முதலீடுகளிலிருந்து ஈபிஎஃப் பெறும் வருமானத்தைப் பொறுத்து தான் பிஎஃப் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  1952-ம் ஆண்டு இபிஎஃப் திட்டத்தின்படியே  வருமானம் வழங்கப்படுவதாகவும் இணையமைச்சர் ராமேஷ்வர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | Mutual Fund:மியூசுவல் ஃபண்டுகளை எப்போது ரிடீம் செய்ய வேண்டும்? எப்படி செய்வது?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News