Indian Railway வழங்கும் அசத்தல் சேவை... இனி உங்கள் லக்கேஜை சுமக்கும் வேலை இல்லை..!!!

பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் பாதையில் இந்திய ரயில்வே வலுவாகமுன்னேறி சென்று அசத்தலான சேவைகளை வழங்கி வருகிறது. ரயில்வே பயணிகளுக்காக ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 28, 2021, 08:33 PM IST
  • பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் பாதையில் இந்திய ரயில்வே வலுவாகமுன்னேறி சென்று அசத்தலான சேவைகளை வழங்கி வருகிறது.
  • ரயில்வே பயணிகளுக்காக ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதன் மூலம் மக்கள் தங்கள் லக்கேஜை ரயில் நிலையத்திற்கு சுமந்து செல்லும் வேலை இல்லை.
Indian Railway  வழங்கும் அசத்தல் சேவை... இனி உங்கள் லக்கேஜை  சுமக்கும் வேலை இல்லை..!!! title=

பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) டிஜிட்டல் இந்தியாவின் பாதையில் இந்திய ரயில்வே வலுவாகமுன்னேறி சென்று அசத்தலான சேவைகளை வழங்கி வருகிறது. ரயில்வே பயணிகளுக்காக ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் லக்கேஜை ரயில் நிலையத்திற்கு சுமந்து செல்லும் வேலை இல்லை.

ரயில்வே தனது பயணிகளுக்காக இந்த அசத்தல் சேவையை கொண்டு வந்துள்ளது என்பதை விளக்குங்கள், அதன் கீழ் உங்கள் சாமான்கள் வீட்டிலிருந்து நேரடியாக ரயிலின் உங்கள் இருக்கைக்கு கொண்டு செல்லப்படும். இந்திய ரயில்வேயின் (Indian Railway) இந்த சேவைக்கு எண்ட் டு எண்ட் லக்கேஜ் சேவை (End to End Luggage Service) என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சேவை அகமதாபாத்தில் தொடங்கியுள்ளது. மேற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அதில், 'மேற்கு ரயில்வே அகமதாபாத் ரயில் நிலையத்தில் புக் பேகேஜ்.காம் மூலம் லக்கேஜ் / பார்சல் சேவை மூலம் உங்கள் வீட்டிலிருந்து ஸ்டேஷனுக்கு மட்டுமால்லாது உங்கள் இருக்கைக்கே லக்கேஜை கொண்டு வந்து சேர்க்கும்.'

ALSO READ | தொடர்ந்து உயரும் எரிபொருள் விலை.. இந்த நகரத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ₹101 ..!!!

 

இந்த சேவை விரைவில் பிற ரயில் நிலையங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவையின் மூலம் வயதானவர்கள் மட்டுமல்லாது, அதிக லக்கேஜ் எடுத்து செல்லும் அனைவருக்கும் மிகவு உதவியாக இருக்கும். இதற்கான கட்டணம் பொருட்களின் அளவு மற்றும் எடையைப் பொறுத்தது.

மேலும், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) தனது இ-கேட்டரிங் சேவைகளை அடுத்த மாதத்திலிருந்து மீண்டும் தொடங்க உள்ளது. இது பயணிகளுக்கு மிகவும் நிம்மதி அளிக்கும் விஷயம். கோவிட் -19 தொற்றுநோய் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி இ-கேட்டரிங் சேவைகள் நிறுத்தப்பட்டன.

சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கான இ-கேட்டரிங் சேவைகளை ஐ.ஆர்.சி.டி.சி மீண்டும் தொடக்க உள்ளது.

இதுதொடர்பாக, ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்வே அமைச்சகத்தின் அனுமதி பெற்ற பின்னர், பிப்ரவரி முதல் ஒரு கட்டமாக இ-கேட்டரிங் சேவைகளை மீண்டும் தொடங்க ஐ.ஆர்.சி.டி.சி தயாராக உள்ளது. முதலில், சுமார் 250 ரயில்களுக்கு சுமார் 30 ரயில் நிலையங்களில் இந்த சேவைகள் தொடங்கப்படும் என கூறியுள்ளது.

 ALSO READ | Extra Baggage கட்டணம்.. கையில் வைச்சிருந்தா தானே சார்ஜ் பண்ணுவீங்க.. சாப்பிட்டா..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News