பென்ஷன் இல்லையேன்னு டென்ஷன் வேண்டாம்.. LIC பாலிஸியில் மிக அற்புத திட்டம் இருக்கு..!!!

நடுத்தர வர்க்கத்தினர், குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு, ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 8, 2020, 06:44 PM IST
  • நடுத்தர வர்க்கத்தினர், குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு, ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
  • ஓய்வூதியம் இல்லையே என எதிர்காலத்தை பற்றி கவலைப்படுபவர்களுக்கு, இந்த பாலிஸி திட்டம் சிறந்த வழியை காட்டுகிறது.
  • இந்தக் பாலிஸியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதியும் கிடைக்கிறது.
பென்ஷன் இல்லையேன்னு டென்ஷன் வேண்டாம்.. LIC பாலிஸியில் மிக அற்புத திட்டம் இருக்கு..!!! title=

பென்ஷன் இருந்தால் வாழ்க்கை டென்ஷன் இல்லாமல் இருக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இருக்க முடியாது. அந்த வகையில், நடுத்தர வர்க்கத்தினர், குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு, ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

ஆயுள் காப்பீட்டு நிறுவனம், அதாவது LIC, நாட்டின் மிகவும் நம்பகமான காப்பீட்டு நிறுவனமாக கருதப்படுகிறது. அரசின் கட்டுபாட்டில் இருப்பதால், இதில் ஆபத்துக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. மேலும் அசால் நடத்தப்படும் இந்த காப்பிட்டு நிறுவனம் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

எல்.ஐ.சி தனது வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்புத் திட்டங்களைக் கொண்டுவருகிறது. எல்.ஐ.சி நிறுவனம், மக்களின் வெவ்வேறு தேவைகளை மனதில் கொண்டு, பல வகையான பாலிஸி திட்டங்களை கொண்டு வந்துள்ளன.  ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைவருக்கு பொருந்தும் வகையில் பல பாலிஸிகல் உள்ளன. அதில் உங்கள் ஓய்வூதியத்தின் கவலையை நீக்கும் ஜீவன் சாந்தி பாலிஸி பற்றி அறிந்து கொள்ளலாம். 

ஜீவன் சாந்தி என்பது,  ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம் உடனடியாக ஓய்வூதியத்தைப் பெற வகை செய்யும் ஒரு பாலிஸி திட்டமாகும்.

ஓய்வூதியம் இல்லையே என எதிர்காலத்தை  பற்றி கவலைப்படுபவர்களுக்கு, இந்த பாலிஸி திட்டம் சிறந்த வழியை காட்டுகிறது.

மொத்தமாக ஒரு தொகையை டெபாசிட் செய்வதன் மூலம், ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறலாம்.

பாலிசியை எடுக்கும், ​​பாலிசிதாரர் ஓய்வூதியத்தை உடனடியாகவும் பெற தொடங்கலாம் அல்லது 5, 10, 15, 20 ஆண்டுகள் என சிறிது காலத்திற்கு பிறகும் பெற தொடங்கலாம். உங்கள் விருப்பம் மற்றும் தேவைக்கு ஏற்ப இதை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். 

இந்த பாலிஸியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதியும் கிடைக்கிறது. இது தவிர, 3 மாதங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் அதனை சரண்டர் செய்யலாம்.

இந்த பாலிஸியில் மொத்த தொகை ரூ.15,27,000 முதலீடு செய்து உடனடியாக ஓய்வூதியம் பெற விரும்பினால், ஒவ்வொரு மாதமும் ரூ.7,550 ஓய்வூதியம் கிடைக்கும்.

ஜீவன் சாந்தி பாலிஸியை பெற யார் விண்ணபிக்கலாம்?

பாலிசி எடுக்க உங்களுக்கு குறைந்தபட்சம் 30 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதே நேரத்தில், உடனடியாக ஓய்வூதியம் தேவைப்பட்டால், அதிகபட்ச வயது 85 வயதாக இருக்க வேண்டும். சிறிது காலம் கழித்து ஓய்வூதியம் பெறும் பாலிஸி திட்டத்திற்கு அதிகபட்ச வயது 79 வயதாக இருக்க வேண்டும்.

எல்.ஐ.சியின்  ஜீவன் சாந்தி பாலிஸி
இந்த திட்டத்தில், நீங்கள் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அதன் மூலம் உங்களுக்கு  உத்தரவாததுடன் கூடிய வருமானம் உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

மேலும் படிக்க | மாதம் ₹70,000 வரை சம்பாதிக்க Amazon வழங்கும் அற்புத வாய்ப்பு..!!!

நீங்கள் உங்கள் பெற்றோர் அல்லது உடன்பிறப்புகளுடன் கூட்டாக பாலிஸியை எடுக்கலாம். மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாலிஸி வகையை தேர்வு செய்யலாம்.

இது ஒற்றை பிரீமியம் திட்டமாகும், இதில் நீங்கள் முதலீடு செய்தவுடன், நீங்கள் ஓய்வூதியம் பெறத் தொடங்குவீர்கள், உங்களுக்கு ஆயுள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும்.

மேலும் படிக்க | அவகாசம் உள்ளது என அலட்சியம் கூடாது, வருமான வரி தாக்கல் தாமதம் பல இழப்புகளை ஏற்படுத்தும்

Trending News