ஜாக்பாட் செய்தி! இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் விரைவில் தொடக்கம்

New Vande Bharat Train: பிரதமர் மோடி ஜூன் 27 ஆம் தேதி வீராங்கனை ராணி துர்காவதி தியாக தின நிகழ்ச்சியிலும், ஷாதோலில் வீராங்கனை ராணி துர்காவதி கௌரவ் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 20, 2023, 02:53 PM IST
  • புதிய வந்தே பாரத் ரயில் பாதைகள்
  • 18 வந்தே பாரத் ரயில்கள் வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன
  • புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்கிறார்.
ஜாக்பாட் செய்தி! இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள் விரைவில் தொடக்கம் title=

மத்திய பிரதேசத்தில் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடியின் வருகை குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் சவுகான் கூறுகையில், ‘பிரதமர் மோடி ஜூன் 27 ஆம் தேதி மத்திய பிரதேசம் வருகிறார். தலைநகர் போபாலில் இரண்டு வந்தே பாரத் ரயில்களை (Bhopal-Indore and Bhopal-Jabalpur) அவர் தொடங்கி வைக்கிறார். இதன் போது கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். 

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திட்டம்
பிரதமர் மோடி ஜூன் 27 ஆம் தேதி வீராங்கனை ராணி துர்காவதி தியாக தின நிகழ்ச்சியிலும், ஷாதோலில் வீராங்கனை ராணி துர்காவதி கௌரவ் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். மேலும் ஜூன் 22 ஆம் தேதி வீராங்கனை ராணி துர்காவதி கவுரவ் யாத்திரையை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார் என்று முதல்வர் கூறினார். வீராங்கனை ராணி துர்காவதி கவுரவ் யாத்திரை மாநிலத்தின் ஐந்து வெவ்வேறு மண்டலங்களில் இருந்து ஜூன் 22 அன்று தொடங்க உள்ளது.

மேலும் படிக்க | 8th Pay Commission அட்டகாசமான அப்டேட்: 44% உயரும் ஊதியம்.. மிக விரைவில் நல்ல செய்தி!!

18 வந்தே பாரத் ரயில்கள் வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன
இது தவிர, ரயில்வே தரப்பில் இருந்து மேலும் மூன்று வந்தே பாரத் ரயில்களை விரைவில் இயக்கும் திட்டம் உள்ளது. தற்போது, 18 வந்தே பாரத்கள் வெவ்வேறு வழித்தடங்களில் ஓடுகின்றன. இந்த வழியில், ஜூன் இறுதிக்குள், நாட்டில் மொத்தம் 23 ரயில்கள் இயக்கத் தொடங்கும். மத்திய பிரதேசம் தவிர, மும்பை - கோவா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விரைவில் கொடியசைத்து இயக்கப்படும். பாலசோர் விபத்துக்குப் பிறகு அதன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கர்நாடகாவிலும் அரை அதிவேக ரயில்கள் இயக்கப்பட உள்ளது. பாட்னா மற்றும் ராஞ்சியை இணைக்கும் ரயிலாக பீகாரில் முதல் வந்தே பாரத் ரயில் கிடைக்கும். இந்த ரயில் கயா, கோடெர்மா, ஹசாரிபாக் சாலை, பரஸ்நாத் மற்றும் பொகாரோ ஸ்டீல் சிட்டி ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் சுமார் 410 கிமீ தூரம் பயணிக்கும்.

புதிய வந்தே பாரத் ரயில் பாதைகள்
மும்பை-கோவா
பெங்களூரு-ஹூப்பள்ளி-தர்வாட்
பாட்னா-ராஞ்சி
போபால்-இந்தூர்
போபால்-ஜபல்பூர்

வந்தே பாரத் ரயில்கள் மற்றும் இந்திய ரயில்வேயின் மாற்றம்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் அறிமுகம், மோடி அரசாங்கத்தின் கீழ் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்திய இரயில்வேயில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாகும். இந்த மாற்றத்தில் ரயில் நிலையங்களின் நவீனமயமாக்கல், புதிய சேவைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் பயணிகளின் வசதியை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே இலக்கு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தென்னிந்தியாவிற்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த ஆண்டு நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட சென்னை - பெங்களூரு - மைசூரு ரயில்கள் ஆகும்.

மேலும் படிக்க | PMAY: மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம்... மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News