இலவச ரேஷன் பெறுவோருக்கு முக்கிய செய்தி, அரசு வெளியிட்ட புதிய அரசாணை

Ration Card Latest News: நாடு முழுவதும் இலவச ரேஷன் பெறும் வசதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இப்போது இலவச ரேஷன் எடுப்பவர்களுக்கு UIDAI மூலம் பெரிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 22, 2022, 09:48 AM IST
  • ரேஷன் கார்டு சமீபத்திய செய்தி.
  • அரசு புதிய அரசாணையை வெளியிட்டது.
  • இலவச ரேஷன் திட்டம்.
இலவச ரேஷன் பெறுவோருக்கு முக்கிய செய்தி, அரசு வெளியிட்ட புதிய அரசாணை title=

இலவச ரேஷன் திட்டம்: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் மூலம் இலவச ரேஷன் பெறுவதற்கான வசதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இப்போது இலவச ரேஷன் எடுப்பவர்களுக்கு UIDAI மூலம் பெரிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அரசின் இந்த முடிவு கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும். எனவே இதன் விதிகளை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஆதார் மூலம் ரேஷன் பெறலாம்
நாடு முழுவதும் ஆதார் வழங்கும் அமைப்பு இது குறித்து தகவல் அளித்தபோது, இனி நீங்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ஆதார் மூலம் ரேஷன் பொருட்களை பெறலாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பான் கார்டு & பே ஸ்லிப் இல்லாமல் தனிநபர் கடன் பெறுவது எப்படி?

இது தொடர்பான தகவலை ட்வீட் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது
UIDAI இன் ட்வீட் மூலம் இது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இனி எங்கிருந்து வேண்டுமானாலும் ஆதார் அடிப்படையில் ரேஷன் பொருட்களை பெறலாம். இருப்பினும், உங்கள் ஆதார் கார்டு புதுப்பிக்கப்பட்டால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது தவிர, ரேஷன் கார்டு தொடர்பாக ஏதேனும் பிரச்னை இருந்தால், 1947 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

21 கிலோ கோதுமை மற்றும் 14 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது
இதற்கிடையில் அயோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21 கிலோ கோதுமை மற்றும் 14 கிலோ அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதேசமயம், பொதுவான ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2 கிலோ கோதுமை மற்றும் 3 கிலோ அரிசி மட்டுமே கிடைக்கும். ஆனால், இம்முறை கார்டுதாரர்கள் கோதுமைக்கு கிலோ ரூ.2ம், அரிசிக்கு ரூ.3ம் கிடைக்கும்.

பொங்கல் பரிசு: ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 ரொக்கம்
இதற்கிடையில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது பற்றி தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறை 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், ரொக்கமாக ரூ.1,000 மட்டும் வழங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission இரட்டை பொனான்சா: அகவிலைப்படியை தொடர்ந்து பயணப்படியும் உயர்ந்தது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News