மாதம் ரூ.50,000 ஓய்வூதியம் பெற வேண்டுமா? இத மட்டும் பண்ணுங்க போதும்!

Retirement Pension: சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்கள் நல்ல வருமானத்தை தரும் என்றாலும் சில சமயங்களில் சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக நாம் சில சமயம் பணத்தை இழக்க நேரிடும்.  

Written by - RK Spark | Last Updated : Mar 20, 2023, 09:30 AM IST
  • மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • என்பிஎஸ் திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஓய்வூதிய திட்டமாகும்.
  • அதிக ரிஸ்க் மற்றும் குறைந்த ரிஸ்க் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
மாதம் ரூ.50,000 ஓய்வூதியம் பெற வேண்டுமா? இத மட்டும் பண்ணுங்க போதும்! title=

Retirement Pension: பொதுவாக மக்கள் பலரும் சிறந்த வருமானத்தை பெறும் நோக்கில் தங்களுக்கு விருப்பமான முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.  நாம் முதலீடு செய்யும் பணம் நமக்கு எதிர்காலத்தில் உதவுமா என்பதை கவனத்தில் வைத்துக்கொண்டு தான் நாம் முதலீட்டை செய்ய வேண்டும்.  பொதுவாக வயதாகும்போது வேலை வாய்ப்புகள் குறையும், இதனால் வயது மூப்பான காலத்தில் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டு போதுமான பணம் இருக்காது.  உங்கள் ஓய்வூதியத்திற்கு நிதியளிப்பதற்கும், வருமானத்தை வெளிப்படையாக உருவாக்குவதற்கும், நீங்கள் ஒரு கார்பஸை நிறுவ வேண்டும்.  உங்கள் முதலீட்டின் தேர்வு மாத வருமானத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது, சந்தையின் வெற்றியின் அடிப்படையில், ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்யும் திட்டங்கள் சிறந்த லாபத்தைத் தருகின்றன.  

மேலும் படிக்க | 8th Pay commission: 8-வது ஊதியக் குழு அமல்படுத்தினால் ஊழியர்களுக்கு இவ்வளவு நன்மைகளா?

சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்கள் நல்ல வருமானத்தை தரும் என்றாலும் சில சமயங்களில் சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக நாம் சில சமயம் பணத்தை இழக்க நேரிடும்.  இந்த திட்டங்களில் நீங்கள் ரூ.9000 முதலீடு செய்தால் அது 10-12 ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 வரையில் மாதாந்திர ஓய்வூதியமாக கிடைக்கப்பெறும்.  அதிக ரிஸ்க் மற்றும் குறைந்த ரிஸ்க் பத்திரங்களின் கலவையில் முதலீடு செய்வது ரூ.50,000 மாத ஓய்வூதியத்தை பெறுவதற்கான சிறந்த வழியாக கருதப்படுகிறது.

தேசிய ஓய்வூதிய அமைப்பு திட்டம்:

என்பிஎஸ் அல்லது தேசிய ஓய்வூதிய அமைப்பு தொழிலாளர்கள் ஓய்வு பெற்றவுடன் அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும்.  இந்த ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தின் சந்தாதாரர்கள் சேமிப்புகளை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் சிறப்பான வருமானத்தை பெற முடியும்.

யூனிட்-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம்:

முதலீட்டு காலம் முடிவடையும் போது உங்களுக்கு வருமானத்தை அளிக்கும் சில ஓய்வூதிய யூஎல்ஐபிஎஸ்-கள் உள்ளன.  இந்த திட்டத்தில் பிரீமியத்தின் ஒரு பகுதி ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் மீதமுள்ள பணம் பங்குகள் மற்றும் கடன் நிதிகளின் கலவையில் சேர்க்கப்படுவதால் முதலீட்டாளர்களுக்கு வருமானம் பெரியளவில் கிடைக்கிறது. 

மியூச்சுவல் ஃபண்ட்:

இந்த முதலீட்டு விருப்பங்கள் முதலீட்டாளர்களுக்கு ஈக்விட்டிகள் அல்லது கடன் சந்தைகளில் இருந்து லாபத்தை வழங்குகின்றன, இவை சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளன.  முதலீட்டாளர்கள் தங்கள் ப்ரோபைலை பேலன்ஸ் செய்ய சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானை(எஸ்ஐபி) பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | முக்கிய அறிவிப்பு! இனி இந்த தொகைக்கு மேல் பணமாக பரிவர்த்தனை செய்ய முடியாது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News