#காவிரி வழக்கு: தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

காவிரி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்கு மத்திய அரசு நாளை பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!  

Last Updated : May 16, 2018, 12:39 PM IST
#காவிரி வழக்கு: தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்! title=

12:37 16-05-2018
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் இரண்டு கோரிக்கைகளை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. புதிய அமைப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க கோரிய தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய அமைப்பின் தலைமையகம் பெங்களூருவில் இருக்கக்கூடாது என தமிழகம் கோரிக்கை விடுத்திருந்தது. 

 


12:31 16-05-2018

காவிரி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்கு மத்திய அரசு நாளை பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


12:31 16-05-2018

காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.


காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் தாக்கல் செய்தது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். 

இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, விரிவான செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கோரி வந்ததையடுத்து, கடந்த திங்கள்கிழமை அன்று மத்திய அரசு தரப்பில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வரைவு திட்டத்தினை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு இதன் வழக்கு விசாரணை மே 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

இதையடுத்து, மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்ட அறிக்கை தொடர்பாக விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு தொடங்கியது!

Trending News