இன்று செவ்வாய்க்கிழமை: மௌன அங்காரக விரதம் மேற்கொள்ள அருமையான நாள்!!

இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் எந்த விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்? என்று பார்ப்போம். 

Written by - | Last Updated : Nov 26, 2019, 03:15 PM IST
இன்று செவ்வாய்க்கிழமை: மௌன அங்காரக விரதம் மேற்கொள்ள அருமையான நாள்!! title=

புது டெல்லி: அங்காரகனை (செவ்வாய்) பிரியப்படுத்த ஒரு விரதம் உள்ளது, இதனால் இழந்த மக்கள் / சொத்து / செல்வம் கிடைக்கும், கடன் தொல்லை தீரும் என நம்பிக்கை

மௌன அங்காரக விரதம் இருக்க அருமையான நாள். செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் விரதத்தின் தன்மை பொறுத்து தோஷம் நீங்கும். செவ்வாய்க்கிழமை முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று கந்தக் கடவுளை வழிபடுவது நல்லது. பலன்கள்: செவ்வாய்க்கிழமை விரதம்  இருந்தால் கடன் பிரச்சனை தீரும். மேலும் தீர்க்க சுமங்கலி யோகம் கிடைக்கும்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நீங்கள் அதிகாலை 5:00 மணிக்கு எழுந்திருக்க வேண்டும், தலை குளித்துவிட்டு காலை 6:00 மணி வரை மௌன விரதத்தை தொடங்க வேண்டும். நீங்கள் தேங்காயை வைக்கும் போது யாராலும் கவனிக்கப்படாமல் கணபதியின் முன் ஒரு மூடிய தேங்காயை வைக்க வேண்டும். அப்போது நீங்கள் கோயிலிலிருந்து வீடு திரும்ப வேண்டும். காலை 6:00 மணி வரை நீங்கள் மௌனத்தை வைத்திருக்க வேண்டும். மௌனத்தை விட்டு வெளியேறும் நேரத்தில் நீங்கள் ஒரு ரோஸ்வுட் அல்லது தேக்கு மர குச்சியை எடுத்து விளக்கில் காட்டி எரிக்க வேண்டும். அதன் முனை கருப்பு ஆகிவிடும். தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மூன்று சிறிய கோடுகளை வரைந்து உங்கள் இடது காலை பயன்படுத்தி அழிக்கவும். பின்னர் ஒரு கப் தேநீர் / காபி அல்லது பால் அல்லது பழச்சாறு உட்கொண்டு "மௌன விரதத்தை கலைத்து விடுங்கள். காலை 6 மணிக்கு மௌன விரதத்தை விடும்போது கீழ்கண்ட மந்திரத்தை 108 முறை சொல்லவும்

 "அங்காரக தோஷ வசி மசி நசி"

இது 16 வாரங்களுக்கு (ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்) செய்து வந்தால், உங்கள் எல்லா ஆசைகளும் நிறைவேறும்.

இந்த மௌன அங்காரக விரதம் பிரம்மாண்ட புராணம் மற்றும் அதர்வ சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் ராசிக்கான பலன்களை அறிந்துக்கொள்ள வேண்டுமா? கிளிக் செய்யவும்

செவ்வாய் மங்களாஷ்டகம்:

பௌமோ தக்ஷிணதிக்த்ரிகோண நிலயோ (அ)வந்தீபதி: காதிர

ப்ரீதோ வ்ருச்சிகமேஷயோ ரதிபதிர் குர்வர்க்க சந்த்ரப்ரிய:

ஜ்ஞாரி: ஷட்த்ரிசுப ப்தரச்ச வஸூதாதாதா குஹாதீச்வரோ

பாரத்வாஜ குலோத்பவோ (அ)ருணசி: குர்யாத் ஸதா மங்களம்

ஆன்மீகம் குறித்து செய்திகளை படிக்க - கிளிக் செய்யவும்

பொருள்: கருங்காலி ஸமித்தில் பிரியமுள்ளவரும், விருச்சிக மேஷங் களுக்கு தலைவரும், பாரத்வாஜ கோத்ரமுள்ளவரும், தெற்கு திசையில் திரிகோண மண்டலத்தில் இருப்பவருமான அங்காரகன் (செவ்வாய்) நமக்கு மங்களத்தைச் செய்யட்டும்.

செவ்வாய் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் அங்காரக பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சுப்பிரமணியரை வழிபடுவதாலும், பவழ மாலை, பவழ மோதிரம் அணிவதாலும், சிவப்பு நிற ஆடை உடுத்துவதாலும், சிவப்பு நிறக் காளையைத் தானம் செய்வதாலும் துவரைத் தானியத்தைத் தானம் கொடுப்பதாலும், கார்த்திகை விரதம், செவ்வாய்க் கிழமை விரதம் இருப்பதாலும் அங்காரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது  ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News