வெயில் காலத்தில் கருவாடு சாப்பிட்டால் தோல் அரிப்பு ஏற்படுமா?

Dry fish: வெயில் காலம் தொடங்கிவிட்டதால் கருவாடு சாப்பிடலாமா? அதனால் ஏதேனும் தோல் பிரச்சனைகள் வருமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 16, 2024, 08:41 PM IST
  • கோடையில் கருவாடு சாப்பிடலாமா?
  • இவர்கள் எல்லாம் சாப்பிடக்கூடாது
  • ரத்த அழுத்தம், தோல் அரிப்பு இருத்தால் வேண்டாம்
வெயில் காலத்தில் கருவாடு சாப்பிட்டால் தோல் அரிப்பு ஏற்படுமா? title=

சிறுமீன்களை காயவைத்து வரும் கருவாடு பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் அதேவேளையில் உடல் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கவனமும் தேவை. முதலில் நன்மைகளை பார்த்துவிடலாம். எல்லா மாமிசங்களையும் விட அதிக புரதம் இருப்பது கருவாட்டில் தான். வெறும் 100 கிராம் கருவாடு எடுத்துக் கொண்டால் அதில் ஏறத்தாழ 70 கிராம் வரை புரதமும், அதிகபட்சம் 5 கிராம் வரை கொழுப்பும் இருக்கிறது. இதுதவிர பொட்டாசியம், சோடியம் எல்லாம் இதில் இருக்கிறது. கொழுப்பு அதிகம் இல்லாத மாமிச உணவை தேடுபவர்களுக்கு கருவாடு சிறந்தது. ஆன்டிஆக்சிடன்டுகளும் இருக்கின்றன. 

மேலும் படிக்க | மலச்சிக்கலுக்கு மரண அடி கொடுக்கும் சூப்பர் டிரிங்க்! பல சிக்கல்களை போக்கும் பானம்!

யார் எல்லாம் கருவாடு சாப்பிடலாம்?

பொதுவாக சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் கருவாடு உடனடியாக சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். உடல்நலம் குன்றி நாக்கில் எந்த சுரணையும் இல்லை என நினைப்பவர்கள் கருவாட்டை காரசாரமாக வைத்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி உங்களை ஆட்கொள்ளும். உடல் ஆரோக்கியம் பெறும் முயற்சியில் பெரும் முன்னேற்றமும் உங்களுக்கு கிடைக்கும். கருவாடு சாப்பிட்டால் எலும்பு, பற்கள் எல்லாம் உறுதியடைவதோடு வயிற்றில் இருக்கும் பூச்சிகளும் வெளியேறும். 

பெண்களுக்கு கருப்பை, நீர்ப்பை, சினைப்பை பிரச்சினைளுக்கு கருவாடு அருமருந்து. பால் அதிகம் சுரக்க வேண்டும் என பச்சிளம் தாய்மார்கள் பால் சுறா கருவாடு சாப்பிடலாம். கொடுவா மீன் கருவாடு, திருக்கை மீன் கருவாடு என ஒவ்வொன்றிலும் ஒருவகையான சத்துகள் நிரம்பியிருக்கின்றன. சில மீன்களை மீனாக சாப்பிடுவதைக் காட்டிலும் கருவாடாக சாப்பிடுவது இன்னும் சிறந்தது. கெளுத்தி மீனை விட கெளுத்தி கருவாட்டில் சத்து அதிகம், சீலா மீனை விட சீலா மீன் கருவாடு சத்து அதிகம்.

யார் கருவாடு சாப்பிடக்கூடாது?

பொதுவாக தலைக்கு எண்ணெய் தேய்து குளியல் போட்ட அன்று கருவாடு சாப்பிடக்கூடாது. சைனஸ், ஆஸ்துமா இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுரையின்படி கருவாடு எத்துக் கொள்ளுங்கள். அதேபோல் ரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் கருவாடு எடுத்துக் கொள்வதில் கவனம் தேவை. கட்டாயம் மருத்துவரின் ஆலோசனையின்றி கருவாடு எத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் கருவாட்டில் உப்பு அதிகமாக இருக்கும். சருமநோய் இருப்பவர்கள் கருவாட்டை கட்டாயம் தவிர்ப்பது நல்லது. அதுவும் கோடை காலத்தில் எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள். மீறி சாப்பிட்டால் நமைச்சல், அரிப்பு எல்லாம் அதிகமாகும்.

மேலும் படிக்க | மருத்துவச் செலவுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு திட்டம் - பெறுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News