இந்த இலையை கொதிக்க வைத்து குடிப்பதால் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும்

அதிகளவு கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த இலைகளை சாப்பிட வேண்டும். அதை கொதிக்க வைக்கும் சரியான வழியை இந்த கட்டுரையில் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 13, 2022, 04:55 PM IST
  • இந்த இலையை கொதிக்க வைத்து குடியுங்கள்.
  • அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள்.
  • பிரிஞ்சி இலைகளின் நன்மைகள்
இந்த இலையை கொதிக்க வைத்து குடிப்பதால் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும் title=

பிரிஞ்சி இலைகளின் நன்மைகள்: நாம் அனைவரும் பிரிஞ்சி இலைகளை மசாலாப் பொருளாகப் பயன்படுத்துகிறோம். பிரிஞ்சி இலைகளை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இது தோல் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் அதன் சிறந்த பலன்களைப் பெற, தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொதிக்க வைத்த பிரிஞ்சி இலையைக் குடிப்பது நன்மை தரும். எனவே பிரிஞ்சி இலையை கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள். 

பிரிஞ்சி இலைகளில் சில முக்கியமான சத்துக்கள் காணப்படுகின்றன, இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது . மேலும் இதில் இரும்பு, கால்சியம், மாங்கனீஸ் என பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இந்த பிரிஞ்சி இலைகளில் நீரிழிவு எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. எனவே தினமும் காலையில் பிரிஞ்சி இலையை கொதிக்க வைத்து குடிப்பதால் பல கடுமையான நோய்கள் நீங்கிவிடும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயை விரட்ட ‘இந்த’ பழத்தின் விதைகளே போதும்! பயன்படுத்தும் முறை! 

இந்த நோய்களில் இருந்து விடுபடலாம்

* தினமும் காலையில் பிரிஞ்சி இலையை கொதிக்க வைத்து குடிப்பது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. 
* பிரிஞ்சி இலையில் வயிற்றைக் குணப்படுத்தவும், எடையைப் பராமரிக்கவும் உதவும் பண்புகள் உள்ளன. 
* சர்க்கரை நோய் உள்ளவர்கள் பிரிஞ்சி இலையை சாப்பிட வேண்டும். இது அதிக மற்றும் குறைந்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிரிஞ்சி இலைகளையும் உட்கொள்ளலாம்.

பிரிஞ்சி இலைகளை இப்படி கொதிக்க வைப்பது
பிரிஞ்சி இலைகளை கொதிக்க வைக்க, ஒரு கிளாஸ் தண்ணீரில் 3 முதல் 4 பிரிஞ்சி இலைகளை போட்டு, தண்ணீர் பாதியாக வரும் வரை கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி, சிறிது ஆறவிடவும். அதன் பிறகு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து இந்த ஜூஸை குடிக்கவும். இந்த பானத்தை தினமும் காலையில் இந்த குடித்து வந்தால் 10 நாட்களில் பலன் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் வீட்டில் உள்ள 4 பொருட்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News