உங்களுக்கு சுகர் இருக்கா, அப்போ இந்த பழங்கள இனிக்கே அவாய்ட் பண்ணுங்க

நீரிழிவு நோய் மிகவும் ஆபத்தான நோயாகும். மறுபுறம் மறந்து கூட சில பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட கூடாது. மறக்காதீர்கள். அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 14, 2022, 02:43 PM IST
  • இந்த பழங்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.
  • நீரிழிவு நோயில் தவிர்க்க வேண்டிய பழங்கள்.
  • நீரிழிவு நோயில் தவிர்க்க வேண்டிய உணவு.
உங்களுக்கு சுகர் இருக்கா, அப்போ இந்த பழங்கள இனிக்கே அவாய்ட் பண்ணுங்க title=

நீரிழிவு நோய் மிகவும் ஆபத்தான நோயாகும். மறுபுறம், நீரிழிவு நோயாளிக்கு சிறுநீரக நோய், மாரடைப்பு, பக்கவாதம், குருட்டுத்தன்மை, உறுப்பு செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால்தான் நீரிழிவு நோயாளிகள் தங்களைப் பற்றி சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பார்கள். பொதுவாக, பழங்கள் சாப்பிடுவதால் நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைப் பெறலாம் என்பார்கள். ஏனெனில் பழங்களில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் மறந்து கூட சில பழங்களை சாப்பிடக்கூடாது. ஏனெனில் அந்த பழங்களை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கச் செய்யும். எனவே சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த பழங்களை சாப்பிடக்கூடாது என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடக்கூடாது

தர்பூசணி
தர்பூசணி சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி உடலில் உள்ள நீர் பற்றாக்குறையையும் பூர்த்தி செய்ய உதவுகிறது. ஆனால் தர்பூசணி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு அவை மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இதனை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். எனவே, நீங்களும் நீரிழிவு நோயாளியாக இருந்தால், தர்பூசணி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

மேலும் படிக்க | இந்த பழம் கொலஸ்ட்ராலின் எதிரி, கட்டாயம் சாப்பிடுங்க 

அன்னாசிப்பழம்
பெரும்பாலான மக்கள் அன்னாசிப்பழம் சாப்பிட விரும்புகிறார்கள், ஆனால் அன்னாசிப்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இந்த பழத்தில் சர்க்கரையின் அளவு மற்ற பழங்களை விட அதிகமாக இருக்கிறது. எனவே, அன்னாசிப்பழம் உட்கொள்வதால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கலாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

வாழைப்பழம்
நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைப்பழம் தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இதில் சர்க்கரை அளவு அதிகளவு உள்ளது. எனவே, நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்து வாழைப்பழத்தை உட்கொண்டால், அது இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும். இதனால் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் வீட்டில் உள்ள 4 பொருட்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News