40 வயது ஆகிவிட்டதா? அப்போ இதையெல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணியே ஆகணும்!

40 வயதிற்கு மேற்பட்டோர் மிளகு, பட்டை, இலவங்கம், சுக்கு, துளசி, அஸ்வகந்தா, ஓமவல்லி இலை, சீரகம், தனியா, மஞ்சள், கருஞ்சீரகம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Jul 2, 2022, 06:56 PM IST
  • நார்ச்சத்து நிறைந்த பொருட்கள் இதய நோயிலிருந்தும், நீரிழிவு நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
  • வாழைப்பழம், கீரைகள் உடலுக்கு உப்பின் அளவு குறைவாக பயன்படுத்தப்படுகிறது.
  • சிவப்பு இறைச்சிகள், முழு கொழுப்பு பால், பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது.
40 வயது ஆகிவிட்டதா? அப்போ இதையெல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணியே ஆகணும்!  title=

பொதுவாக 40 வயதை தாண்டிவிட்டால் உடலில் பல்வேறு விதமான உபாதைகள் வர தொடங்கிவிடும், ஆனால் நாம் முறையான உணவு பழக்கவழக்கம் மற்றும் சில பயிற்சிகளை அன்றாடம் தவறாமல் கடைபிடிப்பதன் மூலம் 40 வயதிற்கு மேலும் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.  தற்போது எப்படியான பழக்கவழக்கங்களை ஆண்கள் கடைபிடிக்கலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க | வெங்காயம், பூண்டு தோலில் இருக்கு எக்கச்சக்க நன்மைகள்: தூக்கி எறிஞ்சிடாதீங்க

அதிகமான நார்ச்சத்து உள்ள பொருட்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், நார்ச்சத்தானது நல்ல பாக்டீரியாவை உடலில் உருவாக்குவதற்கும், உணவை செரிக்க செய்வதற்கும் உதவுகிறது.  நார்ச்சத்து நிறைந்த பொருட்கள் இதய நோயிலிருந்தும், நீரிழிவு நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.  பட்டாணி, பருப்பு, கருப்பு பீன்ஸ், விதைகள், பச்சை பட்டாணி, ஓட்ஸ், ராஷ்பெரிஸ், கீன்வா, பச்சை காய்கறிகள், நட்ஸ்கள், பாலிஷ் செய்யாத அரிசிகள் போன்றவற்றில் நார்சத்து மிகுந்துள்ளது.  வாழைப்பழம், கீரைகள் போன்றவற்றை சாப்பிடும்போது உடலுக்கு பொட்டாசியம் கிடைப்பதால் உப்பின் அளவு குறைவாக பயன்படுத்தப்படுகிறது.

சிவப்பு இறைச்சிகள், முழு கொழுப்பு பால், பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது, இதற்கு பதிலாக சுத்தமான நெய் சாப்பிடலாம்.  மிளகு, பட்டை, இலவங்கம், சுக்கு, துளசி, அஸ்வகந்தா, ஓமவல்லி இலை, சீரகம், தனியா, மஞ்சள், கருஞ்சீரகம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.  மேலும் உணவில் நார்சத்து நிறைந்த பொருட்களை சேர்த்து கொள்வது குடலுக்கு நன்மையை அளிப்பதாக கருதப்படுகிறது.  பார்லி போன்ற பல்வேறு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.  உங்கள் டயட்டில் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சேர்த்துக்கொள்வதன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகுகிறது.

மேலும் இதுபோன்ற உணவுகள் உங்கள் உடலில் படியும் அளவுக்கதிகமான கொழுப்புகளை தடுப்பதுடன், கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது.  பதப்படுத்தப்பட்ட உணவுகளை தின்பதை தவிர்த்துவிட்டு புதிதாக சமைக்கப்பட்ட அல்லது பச்சை காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.  ஒவ்வொரு சீசனுக்கு கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் வாங்கி உண்ண வேண்டும்.

மேலும் படிக்க | உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தணுமா: இந்த 4 பழங்கள் உதவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News