இயற்கையாகவே நரை முடியை கருப்பாக்க இதை செய்யுங்கள்

இன்றைய காலகட்டத்தில், இளைஞர்களும் வெள்ளை முடியால் சிரமப்படுகிறார்கள், இதனால் அவர்கள் மிகவும் சங்கடங்களைச் சந்திக்க நேரிடுகிறது, ஆனால் வீட்டு வைத்தியம் மூலம், நீங்கள் இயற்கையாகவே முடிக்கு டை/சாயம் பூசலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2022, 11:55 AM IST
  • வெள்ளை முடி பற்றி கவலைப்பட வேண்டாம்
  • வீட்டிலேஎ முடியை கருமையாக்கலாம்
  • இயற்கை முறையில் டை/சாயம் தயாரிப்பது எப்படி?
இயற்கையாகவே நரை முடியை கருப்பாக்க இதை செய்யுங்கள் title=

புதுடெல்லி: சிறுவயதிலேயே வெள்ளையாக மாறும் தலைமுடியை பக்கவிளைவுகள் இல்லாமல் கருமையாக மாற்ற வேண்டுமானால், அதற்கு சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும். கடுகு எண்ணெயுடன் மருதாணி மற்றும் நெல்லிக்காய் போன்ற ஒரு செய்முறையை இன்று நாம் காண் உள்ளோம். இது உங்கள் தலைமுடியை இயற்கையாகவே கருப்பாக்கும் மற்றும் பல முடி பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். இந்த எண்ணையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முடி கருமையாக்க இயற்கை எண்ணெய் தயாரிப்பது எப்படி?
* இரும்புக் கடாயை எடுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அது நல்ல விளைவை தரும். 

* கடாயில் ஏதேனும் ஒரு பிராண்டின் 200 மில்லி கடுகு எண்ணெயை ஊற்றவும்.

மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

* இதை மிதமான தீயில் வைத்து, அதில் 2 முதல் 3 டீஸ்பூன் ஹெர்பல் ட்ரை மருதாணியை பொடியை சேர்க்கவும்.

* மருதாணியை கலக்கவும். கட்டிகள் இல்லமல் நன்கு கலக்கும். 2 முதல் 3 நிமிடங்கள் மிக்ஸ் செய்யவும்.

* இப்போது 1 டீஸ்பூன் நெல்லிக்காய் தூளை சேர்க்கவும், இது முடிக்கு நன்மை நிறைந்தது. கூந்தலின் பொலிவை பராமரிக்கவும், முடி பிரச்சனைகளை போக்கவும், வெள்ளை முடியை போக்கவும் இது உதவியாக இருக்கும்.

* இப்போது அதனுடன் ஒன்றரை முதல் இரண்டு தேக்கரண்டி வெந்தயப் பொடியைச் சேர்க்கவும். வேர்களில் இருந்து முடியை கருமையாக்குவதில் இது நன்மை பயக்கும்.

* பழுப்பு நிறமாக மாறும் வரை கலக்கவும். இந்த முழு செயல்முறையும் 7 முதல் 8 நிமிடங்கள் ஆகும். இந்தக் கலவையை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். அது முற்றிலும் பழுப்பு நிறமாக மாறியதும், கேஸ் ஐ அணைக்கவும். அதன் பிறகு ஆற விடவும்.

* பிறகு, அதை 12 முதல் 24 மணி நேரம் மூடி வைக்கவும். 

* 12 முதல் 24 மணி நேரம் கழித்து இந்த எண்ணெயை வடிகட்டவும். இந்த எண்ணெயை சில மாதங்களுக்கு சேமித்து வைக்கலாம்.

* இந்த எண்ணெயை ஷாம்பு செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன் தடவவும். 

* இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம். இது முடியில் உள்ள சாயக் குழப்பத்தையும் நீக்கும். மேலும், இந்த எண்ணெய் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. எந்த சிறிய பாத்திரத்திலும் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News