பள்ளிக்கு செல்லும் போது சிறுவனின் மீது வேன் மோதியதில் பரிதாப பலி...

11 வயது சிறுவன் டெல்லியின் ஜனக்க்புரியில் பள்ளிக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் பணியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 

Last Updated : Feb 10, 2019, 11:22 AM IST
பள்ளிக்கு செல்லும் போது சிறுவனின் மீது  வேன் மோதியதில் பரிதாப பலி... title=

11 வயது சிறுவன் டெல்லியின் ஜனக்க்புரியில் பள்ளிக்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் பணியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 

புது டெல்லி: மேற்கு டெல்லி ஜானக்புரி பிரதேசத்தில் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்த சிறுவன் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காலை 7.45 மணியளவில் நடந்ததுள்ளது. பாங்கா சாலையின் அருகே வேகமாக வந்த பள்ளி வேன் பள்ளிக்கு சென்ற அந்த சிறுவனை தாக்கியது. இதையடுத்து, அந்த வேனை இயக்கிவந்த ஓட்டுனர் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளார். 

இதையடுத்து, காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து அங்கு போருத்தபட்டிருந்த CCTV காட்சிகளை பரிசோதித்துள்ளனர். பின்னர் அந்த வீடியோ மூலம் அந்த வாகனத்தின் எண்ணை அடையாளம் காணப்பட்டு நேற்று (சனிக்கிழமை) அந்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர், தப்ரி பகுதியில் ராஜபுரி வசிப்பிடமாக இருந்த அன்மோல் துபே (29) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.  

 

Trending News