போனி புயல் எதிரொலி; தெற்குரயில்வே ரயில்கள் ரத்து...

போனி புயல் பாதிப்பால் சென்னை வரும் இரண்டு ரயில்கள் உள்பட 3 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!

Last Updated : May 6, 2019, 05:20 PM IST
போனி புயல் எதிரொலி; தெற்குரயில்வே ரயில்கள் ரத்து... title=

போனி புயல் பாதிப்பால் சென்னை வரும் இரண்டு ரயில்கள் உள்பட 3 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!

வங்க கடலில் உருவான போனி புயல் சூறாவளியாக மாறி கடந்த வெள்ளி அன்று காலை ஒடிசா கடற்கரையை கடக்க துவங்கியது. காற்றின் வேகம் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் ஒடிசாவை தாக்கியது. அதில், பெரிதும் பாதிக்கப்பட்ட பூரி நகரின் சாலைகளை சீரமைத்து, சாய்ந்துக் கிடக்கும் மரங்கள், மின் கம்பங்களை அகற்றும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சூறாவளிக் காற்றில் கூரைகள், ஜன்னல்கள் அடித்துச் செல்லப்பட்டதால் கட்டடங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சுமார் ஒருலட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை, உணவு ,உறைவிடம் போன்ற உதவிகளை முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ரயில், விமானம் , தொலைத் தொடர்பு, குடிநீர் விநியோகம், மின்விநியோகம் போன்ற சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில் தற்போது போனி புயல் பாதிக்க பகுதிகளில் பராமறிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கீழ்வரும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • வண்டி எண் -22887 : ஹௌரா - எஸ்வந்தபுரம் வாரச்சேவை ரயில் ஆனது வரும் மே 7-ஆம் நாள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வண்டி எண் -22611 : புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் மத்திய ரயில்வே நிலையம் - புதிய ஜலபாய்குரி வாரச்சேவை ரயில் ஆனது வரும் மே 8-ஆம் நாள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வண்டி எண் -82614 : புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் மத்திய ரயில்வே நிலையம் - சந்தர்காச்சி சுவிதா ரயில் நிலையம் வரை இயக்கும் ரயில் ஆனது வரும் மே 8-ஆம் நாள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News