6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கண்களைத் தோண்டி எடுத்த கொடூரம்

ஆறு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, அதன் பின்னர் அந்த சிறுமியின் கண்களை தோண்டியெடுத்துள்ளனர். அந்த குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 23, 2020, 06:36 PM IST
6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கண்களைத் தோண்டி எடுத்த கொடூரம் title=

தாமோ: மத்திய பிரதேசத்தில் இருக்கும் தாமோ என்ற பகுதியில் வசித்து வந்த ஆறு வயது சிறுமி  தனது வீட்டிற்கு அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் இன்று தெரிவித்தனர். அதாவது அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, அதன் பின்னர் அந்த சிறுமியின் கண்களை தோண்டியெடுத்துள்ளனர். அந்த குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை தனது வீட்டிற்கு அருகில் இருந்த தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபரால் இழுத்துச் செல்லப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அவரின் வீட்டார் அவளை தேடி உள்ளனர். இன்று காலை தான் அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள். 

"அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் மற்றும் அவரது கண்களில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது" என்று மூத்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் சிங் சவுகான் கூறினார்.

"நாங்கள் பல சந்தேக நபர்களை விசாரித்தோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாங்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், சீக்கிரம்' குற்றவாளிகளை பிடிப்போம்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

போலீஸ் குழு சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஜபல்பூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு உடல் முழுவதும் பலத்த காயங்களுக்கு இருக்கும் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராட நாடு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ள நேரத்தில், காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மத்திய பிரதேசத்தை திகைக்க வைத்துள்ளது. 

Trending News