7th Pay Commission: இந்த தேதியில் வருகிறது மாஸ் அறிவிப்பு, குஷியில் ஊழியர்கள்

7th Pay Commission: அகவிலைப்படி (டிஏ) உயர்வை மத்திய அரசு மார்ச் 22, அதாவது  புதன்கிழமை அன்று அறிவிக்க வாய்ப்புள்ளது. மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் முக்கியமான மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு டிஏ உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 21, 2023, 12:53 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது.
  • தற்போது, ஊழியர்கள் 38% அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தைப் பெறுகின்றனர்.
  • புதிய உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் அகவிலைப்படி 42% -ஐ எட்டும்.
7th Pay Commission: இந்த தேதியில் வருகிறது மாஸ் அறிவிப்பு, குஷியில் ஊழியர்கள் title=

7வது ஊதியக் கமிஷன் - அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்காக காத்திருக்கின்றனர். முன்னதாக, ஹோலி பண்டிகையை ஒட்டி அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு (டிஏ) கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், மத்திய அரசு அந்த நேரத்தில் இது பற்றி எதையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.

ஜீ பிசினஸ் அறிக்கையின்படி, அகவிலைப்படி (டிஏ) உயர்வை மத்திய அரசு மார்ச் 22, அதாவது  புதன்கிழமை அன்று அறிவிக்க வாய்ப்புள்ளது. மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் முக்கியமான மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு டிஏ உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது. தற்போது, ஊழியர்கள் 38% அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தைப் பெறுகின்றனர். புதிய உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் அகவிலைப்படி 42% -ஐ எட்டும். இதன் காரணமாக ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு இருக்கும். 

கடந்த முறை, மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை செப்டம்பர் 28, 2022 அன்று வெளியிட்டது. அது ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வந்தது. ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரியில் ஒரு முறையும், ஜூலையில் இரண்டாவது முறையும் அகவிலைப்படியில் மத்திய அரசு திருத்தம் செய்கிறது. 

4% அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, மொத்த அகவிலைப்படி 42% ஆக உயரும். இதன் காரணமாக, ரூ.18,000 அடிப்படைச் சம்பளத்தின் மீதான மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.90,720 (ஆண்டுதோறும்) ஆக இருக்கும். ஒவ்வொரு மாதமும் ரூ.720 அதிகரிக்கும். தற்போது, 38% வீதத்தில், ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,840 அகவிலைப்படி வழங்கப்படுகிறது. புதிய உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களுக்கு மாதம் ரூ.7,560 கிடைக்கும்.

மேலும் படிக்க | 8th Pay commission: 8-வது ஊதியக் குழு அமல்படுத்தினால் ஊழியர்களுக்கு இவ்வளவு நன்மைகளா? 

ஊழியர்களின் மாத சம்பளம் ரூ.18,000 என்ற கணக்கில், அகவிலைப்படி கணக்கீடு இதோ: 

18000 x 42 / 100 = 7560

புதிய அகவிலைப்படி (42%) - ரூ 7560/மாதம்

புதிய அகவிலைப்படி (42%) - ரூ 90,720/ஆண்டு

இதுவரை அகவிலைப்படி - (38%) ரூ.6840/மாதம்

எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது - 7560- 6840 = மாதம் ரூ 720

ஆண்டு ஊதிய உயர்வு - 720X12 = ரூ.8,640

மேலே உள்ள ஃபார்முலாவைப் பயன்படுத்தி அனைத்து ஊழியர்களும் அவரவர் அகவிலைப்படி உயர்வுத் தொகையைக் கணக்கிடலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் ஊழியர்களுக்கு 2 மாஸ் அறிவிப்புகள், தயாராகும் அரசு!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News