ஏர் இந்தியா சிவசேனா எம்பியை பிளாக்லிஸ்ட் செய்தது

Last Updated : Mar 24, 2017, 11:34 AM IST
ஏர் இந்தியா சிவசேனா எம்பியை பிளாக்லிஸ்ட் செய்தது title=

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்தார் சிவசேனா கட்சி எம்பி ரவீந்திர  கெய்க்வாட். 

சிவசேனா எம்பி ரவீந்திரா கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் புனேவில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்தார். அப்போது, விமானத்தினுள் அமரும் சீட் ஒதுக்கீடு காரணமாக பிரச்சினை எழுந்தது.

அதுகுறித்து ஏர் இந்தியா விமான ஊழியர் விசாரித்த போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி விமான ஊழியரை சிவசேனா கட்சி எம்பி அடித்துள்ளார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், விமான ஊழியர் தாக்கப்படுவது குறித்தும் விமான நிலைய போலீசில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை ஏர் இந்தியா விமான செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்பி ரவிந்திர கெய்வாட் இனி எந்த விமானத்திலும் பயணம் செய்ய முடியாத அளவுக்கு தடை செய்யப்பட உள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் விமானப் பயணம் செய்ய தகுதி இல்லாதவர்கள் என ஒரு பட்டியலைக் தயார் செய்து, அதில் முதல் நபராக ரவிந்திர கெய்க்வாட்டை சேர்க்க முடிவு செய்துள்ளது.

இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டவரின் பெயர், அடையாள அட்டை, பாஸ்போர்ட் எண், ஆகியவை கொண்டு அவர் எந்த விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. ஆனால் இதுகுறித்து யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது எனவும், முடிந்தால் போலீசார் தன்னை கைது செய்யட்டும் என சிவசேனா எம்பி ரவிந்திர கெய்வாட் தெரிவித்துள்ளார்.

Trending News