)
Dhanush Reaction To Nayanthara Statement | நடிகை நயன்தாரா, நடிகர் தனுஷ் இடையே திரைமறைவில் நடந்த மோதல் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. நயன்தாரா தன்னுடைய திருமண ஆல்பத்தை பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்திருக்கிறார். அந்த திருமண ஆல்பத்தில் விக்னேஷன் சிவனுடன் காதல் ஏற்பட்ட தருணமான நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு தளத்தின் காட்சிகளை சேர்க்குமாறு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான நடிகர் தனுஷ்ஷின் ’வொண்டர்பார்’ நிறுவனத்திடம், சில காட்சிகளுக்கு தடையில்லா சான்று வழங்குமாறு (NOC) நயன்தாரா - விக்னேஷ் சிவன் கேட்டிருக்கின்றனர். இதற்கு தனுஷ் சம்மதம் தெரிவிக்கவில்லை.
ஏனென்றால் ’நானும் ரவுடி தான்’ படத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட் தொகையை விட அதிகம் செலவானதற்கும், கூடுதல் நாட்கள் சூட்டிங் நடத்தியதற்கும் தயாரிப்பாளரான தனுஷ் கடுமையான கோபத்தை காட்டியிருக்கிறார். அத்துடன், படத்தை வெளியிட்டு வணிக ரீதியாக ஏற்பட்ட நஷ்டத்தால் நயன்தாரா - விக்னேஷ் சிவன் மீது அப்போது முதல் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார் தனுஷ். இதனால், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆல்பத்துக்கு அவர் தடையில்லா சான்றிதழ் கொடுக்கவில்லை. தன்னுடைய பட காட்சிகளை வணிக ரீதியாக மற்றொரு நிறுவனம் பயன்படுத்துவதற்கு தனுஷ் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், மீறி பயன்படுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட நயன்தாரா திருமண ஆல்பத்தில் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் இருந்ததால், தனுஷ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் முறையான அனுமதி பெறாமல் தங்கள் நிறுவனத்தின் படக்காட்சிகள் பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து தான், நடிகை நயன்தாரா நடிகர் தனுஷ் மீது உட்சபட்ச கோபம் அடைந்து காட்டமான அறிக்கையை வெளியிட்டார். அதில், தனுஷ் மேடையில் பேசுவது போன்றவர் அல்ல, பிறர் துன்பத்தில் இன்பம் காண்கிறவர். எனக்கு எதிராக நடந்து கொள்ளும் நீங்கள், அண்ணணால் திரைத்துறைக்கு அடையாளம் காட்டப்பட்டவர். ஆனால் நான் தனி பெண்ணாக சினிமா துறையில் அடியெடுத்து வைத்து உயர்ந்திருகிறேன், அதனால் உங்கள் மலிவான செயலை இனியாவது சரிசெய்து கொள்ளுங்கள்.
வியாபார ரீதியாக நடந்து கொண்டிருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால் என்மீது இருக்கும் தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக இப்படி நடந்து கொண்டிருக்கிறீர்கள். மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம். ஒரு தயாரிப்பாளர் அவரது படங்களில் பணியாற்றும் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அவர்களின் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்த முடியுமா என்ன?. நீங்கள் தயாரிப்பாளர்தானே தவிர, சட்ட திட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட பேரரசன் இல்லை." என காட்டமாக எழுதியிருந்தார்.
ஆனால், நடிகர் தனுஷ் இந்த விமர்சனத்துக்கு இதுவரை எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. அவரது தரப்பில் பிஆர்ஓ சொன்ன தகவலின்படி, நடிகர் தனுஷ் இப்போது ஷூட்டிங்கில் இருப்பதாகவும், படப்பிடிப்பு முடிந்ததும் உரிய விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய வழக்கறிஞர் அருண் குமார் பேசும்போது, நடிகை நயன்தாரா குற்றச்சாட்டு வொண்டர்பார் நிறுவனம் முறையான விளக்கத்தை கொடுக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால், தனுஷ் நேரடியாக எந்த பதிலும் அளிக்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்படியான விளக்கத்தை மட்டுமே அவரது நிறுவனம் கொடுக்கும் என்றும், தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவர் பதில் அளிக்க வாய்ப்பு இல்லை என நடிகர் தனுஷ் பற்றி தெரிந்தவர்கள் கூறியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ