காவிரி தீர்ப்பு குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம்

காவிரி தீர்ப்பு தொடர்பாக வரும் மார்ச் 7-ஆம் நாள் கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்!

Last Updated : Mar 2, 2018, 03:28 PM IST
காவிரி தீர்ப்பு குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் title=

காவிரி தீர்ப்பு தொடர்பாக வரும் மார்ச் 7-ஆம் நாள் கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்!

காவிரி நதி நீர் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை குறித்து ஆலோசிக்க கர்நாடகாவில் வரும் 7-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

காவிரி வழக்கில் தமிழகத்திற்கான நீர்ப் பங்கீட்டை குறைத்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து ஆலோசிக்க வரும் 7-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்துக்கு காவிரிப் படுகைப் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் கர்நாடகத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending News