கணவரின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்த மனைவி! அதிர்ச்சி அளிக்கும் காரணம் இதுதான்!

Crime News In Tamil: ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஆர் மாவட்டத்தில் தனது முன்னாள் மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பார்த்துக் கொண்டிருந்த கணவரின் பிறப்புறுப்பை பிளேடால் வெட்டிய மனைவி. என்ன நடந்தது? அறிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Bhuvaneshwari P S | Edited by - Shiva Murugesan | Last Updated : Jul 24, 2023, 01:12 PM IST
  • அவருக்கு முதல் மனைவிக்கும் செட் ஆகாததால், இருவரும் பிரிந்தனர்.
  • தனது முதல் மனைவியின் ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாவில் பார்த்த கணவர்.
  • கடும் கோபமுற்ற வரம்மா, தனது கணவரின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துள்ளார்.
கணவரின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்த மனைவி! அதிர்ச்சி அளிக்கும் காரணம் இதுதான்! title=

Crime News In Andhra Pradesh: ஆந்திர மாநிலம் நந்திகமவில், பழிவாங்கும் நோக்கில் பெண் ஒருவர் தனது கணவரின் பிறப்புறுப்பை கொடூரமாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணம் தான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ஆந்திராவை சேர்ந்தவர் 26 வயதான ஆனந்த் பாபு, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவருக்கும் அவரது முதல் மனைவிக்கும் செட் ஆகாததால், இவருக்கும் முதல் மனைவிக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு 4 ஆண்டுகளுக்கு முன்பு வரம்மா என்ற பெண்ணை இரண்டாவதாக ஆனந்த் பாபு திருமணம் செய்துள்ளார். என்டிஆர் மாவட்டத்தில் வசித்து வரும் இந்த ஜோடி, தினக்கூலியாக வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த சூழலில், ஆனந்த் பாபு கடந்த சனிக்கிழமை தனது முதல் மனைவியின் ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராம் தளத்தில் பார்த்துள்ளார். இதனைக்கண்ட வரம்மா கணவருடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் இந்த வாய்ச்சண்டை கைகலப்பாக மாறியுள்ளது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டுள்ளனர். ஒருகட்டத்தில் கடும் கோபமுற்ற வரம்மா, தனது கணவரின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துள்ளார். இதனால் அலறியுள்ளார் ஆனந்த் பாபு. அவரின்  சத்தம் கேட்டு வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு  அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

மேலும் படிக்க - வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரவுடி வெட்டிப்படுகொலை! திண்டுக்கலில் தொடரும் கொலைகள்!

ஆந்திரப் பிரதேச செய்திகள்

அங்கு அவரை பறிசோதித்த மருத்துவர்கள், ஆனந்த் பாபுவின் பிறப்பு உறுப்பில் கடுமையான வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்கு பின் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் வரம்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா, அவர் கைதுசெய்யப்பட்டாரா போன்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க - பாம்பை கடிக்க வைத்து தொழிலதிபர் கொலை... காதலியின் கொலைக்கு இதுதான் காரணமா...!]

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News