பஞ்சாப், கோவாவில் இன்றுடன் பிரசாரம் முடிவு

பஞ்சாப் மற்றும் கோவா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிகிறது.

Last Updated : Feb 2, 2017, 09:39 AM IST
பஞ்சாப், கோவாவில் இன்றுடன் பிரசாரம் முடிவு title=

சண்டிகர்: பஞ்சாப் மற்றும் கோவா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிகிறது.

பஞ்சாப் மற்றும் கோவாவிற்கு நாளை மறுநாள் (பிப்ரவரி 4) ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. 

உ.பி., பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்திரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் பிப்ரவரி 4 ம் தேதி துவங்க உள்ளது. மார்ச் 8 ம் தேதி வரை நடக்கும் தேர்தலின் முடிவுகள், மார்ச் 11 ம் தேதி வெளியிடப்பட உள்ளன.

2017 பஞ்சாப் தேர்தல் வேட்பாளர்கள் பெயர்கள்:

-சிரோமணி அகாலி தளம்: பிரகாஷ் சிங் பாதல் மற்றும் சுக்பீர் சிங் பாதல்

-காங்கிரஸ்: கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து

-ஆம் ஆத்மி கட்சி: பகவன்த் மன் மற்றும் எச்.எஸ். பூல்கா

-பாரதிய ஜனதா கட்சி: ஜே.ஜே. சிங்

2017 கோவா தேர்தல் வேட்பாளர்கள் பெயர்கள்:

-பாரதிய ஜனதா கட்சி: லட்சுமிகாந்த் பர்சேகர்

-ஆம் ஆத்மி கட்சி: எல்விஸ் கோம்ஸ்

-மஹாராஷ்டிரவதி கோமண்டக் கட்சி: தீபக் தவாலிகர்

பஞ்சாப் மற்றும் கோவாவில் நடக்கும் இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Trending News