கார் ஓட்டுநர்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: டெல்லி அரசு உத்தரவு!

குழந்தைகள் மற்றும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கார் ஓட்டுநர்களுக்கு டெல்லி அரசு உத்தரவு.

Last Updated : Nov 29, 2017, 12:44 PM IST
கார் ஓட்டுநர்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: டெல்லி அரசு உத்தரவு! title=

டெல்லியில் கார்களில் பயணம் செய்யும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்கவும், குழந்தைகள் கடத்தலை தடுக்கவும் கார் ஓட்டுநர்களுக்கு டெல்லி போக்குவரத்துறை சுற்றிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிக்கையில், கார்களில் உள்ள கண்ணாடிகளில் ஸ்டிக்கர் தெளிவாக இருக்க வேண்டும் என்றும், பயணத்தை தொடங்கும் முன் குழந்தைகள் உள்ளே இருக்கும் போது கார் கதவுகளை பாதுகாப்பாக வெளிப்பக்கமாக பூட்டுவதை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். 

மேலும், பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் டெல்லி போக்குவரத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

Trending News