மக்களே உஷார்! 126 நாட்களுக்குப் பிறகு அதிக அளவில் கொரோனா பாதிப்பு

COVID-19 India Tally: இந்தியாவில் 126 நாட்களுக்குப் பிறகு, ஒரே நாளில் அதிக அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. மக்களே எச்சரிக்கையாக இருங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 18, 2023, 12:53 PM IST
  • நான்கு இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 5,30,799 ஆக உயர்ந்துள்ளது
  • நாடு முழுவதும் உள்ள ஒன்பது மாவட்டங்களில் கோவிட் பாசிடிவ் விகிதங்கள் 10% அதிகமாக பதிவாகியுள்ளன
  • நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் 220.64 கோடி பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மக்களே உஷார்! 126 நாட்களுக்குப் பிறகு அதிக அளவில் கொரோனா பாதிப்பு title=

India Covid Cases: மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, 126 நாட்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று இந்தியாவில் ஒற்றை நாளில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 800 ஐத் தாண்டியுள்ளது. அதே நேரத்தில் செயலில் உள்ள எண்ணிக்கை 5,389 ஆக உயர்ந்துள்ளது. 843 புதிய நோய்த்தொற்றுகளுடன், நாட்டின் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக (4,46,94,349) அதிகரித்துள்ளது. நான்கு பேர் பலியானதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,799 ஆக உயர்ந்தது. இந்த தரவு காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்டது. 

ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவரும், இரண்டு பேர் கேரளா மாநிலதில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது மொத்த நோய்த்தொற்று சராசரி 0.01 சதவிகிதமாக உள்ளது. தேசிய கோவிட்-19 மீட்பு விகிதம் 98.80 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்த கொரோனா நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,58,161 ஆக உயர்ந்துள்ளது மற்றும் இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் 220.64 கோடி பேருக்கு கோவிட்-19 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த வாரத்தில் (மார்ச் 9- மார்ச் 15), நாடு முழுவதும் உள்ள ஒன்பது மாவட்டங்களில் கோவிட் நேர்மறை விகிதங்கள் 10 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

உத்தரகண்டில் உள்ள பித்தோராகர், 40 பவர் சதவீதம் என்ற அதிகபட்ச நேர்மறை விகிதத்தைப் பதிவுசெய்துள்ளது. அதைத் தொடர்ந்து ரத்லம் (18.18 சதவீதம்), தார் (14.29 சதவீதம்) மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நீமுச் (11.11 சதவீதம்); இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி (15.04 சதவீதம்), சிம்லா (14.84 சதவீதம்) மற்றும் சோலன் (12.91 சதவீதம்); குஜராத்தில் பொடாட் (14.29 சதவீதம்); மற்றும் ராஜஸ்தானில் துங்கர்பூர் (10 சதவீதம்) என சுகாதார அமைச்சக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கொரோனாவுக்கு 3ஆம் ஆண்டு நினைவுத்தினம்! அடுத்து என்ன நடக்கும்? உஷார்!

கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய 23 மாவட்டங்களில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை நேர்மறை விகிதங்கள் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்களில், அதிக எண்ணிக்கையிலான தொற்று பதிப்பு பதிவாகியுள்ளன. கோவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இடர் மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்றுமாறு மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் இந்த மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க: மீண்டும் பீதியை ஏற்படுத்தும் கொரோனா, தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News