மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

மார்ச் 13 அன்று, இந்தியாவில் 2 பேர் கோவிட் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர் மற்றும் 525 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன.   

Written by - RK Spark | Last Updated : Mar 13, 2023, 04:28 PM IST
  • கர்நாடகாவில் மட்டும் 585 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • 311 பேர் தொற்றுநோயிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
  • தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தான் அதிகளவிலான கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?  title=

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் சிக்கி தவித்து வந்தது.  இந்த கொரோனா வைரசுக்கு பல உயிர்கள் பலியாகியுள்ளது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டனர்.  ஒவ்வொரு நாடுகளிலும் தின்தோறும் ஆயிரக்கணக்கான, நூற்றுக்கணக்கான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.  மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் அளவிற்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.  கொரோனா பரவலால் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் மூடப்பட்டது, கோவில்கள் மூடப்பட்டது, திரையரங்குகள், வணிக வளாகங்கள், சந்தை போன்ற பொதுமக்கள் அதிகள் கூடும் இடங்கள் எல்லாம் மூடப்பட்டது.  கொரோனா வைரஸ் மக்களை வீட்டிற்குள்ளேயே முடக்கியது, இந்த நாட்களில் வீட்டை விட்டு மக்கள் வெளியேற முடியாத நிலை இருந்து வந்தது.  

மேலும் படிக்க | பீதியை கிளப்பும் H3N2 வைரஸ் ! அறிகுறிகளும் பாதுகாத்துக் கொள்ளும் முறைகளும்!

கொரோனாவை ஒழிக்க ஆய்வாளர்கள் பலரும் தடுப்பூசிகளை கண்டறிந்து வந்தனர். கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.  ஒவ்வொரு அரசும் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி அதனை போட்டுக்கொள்ள அறிவுறுத்தியது.  இப்படி கொரோனா தொற்று இரண்டு வருடங்களாக மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் சமீப காலமாக தான் கொரோனாவின் தாக்கம் குறைந்து மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டு இருக்கின்றனர்.  இப்போது மக்கள் பழையபடி தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ தொடங்கியிருக்கும் நிலையில் மீண்டும் கொரோனா மறுபிரவேசம் எடுத்துள்ளது.  தினந்தோறும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களை மீண்டும் பயத்தில் உறையச்செய்துள்ளது.  

114 நாட்களுக்குப் பிறகு 500-க்கும் மேற்பட்ட கோவிட் வழக்குகள் பதிவாகிய பிறகு கடந்த சனிக்கிழமை மேலும் 19 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளது, கடந்த 11 நாட்களில் ஏழு நாள் சராசரி வழக்குகளும் இரட்டிப்பாகியுள்ளன.  குறிப்பாக நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தான் அதிகளவிலான கொரோனா வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.  கடந்த ஒரு வாரத்தில் கர்நாடகாவில் மட்டும் 585 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மார்ச் 13 அன்று, இந்தியாவில் 2 பேர் கோவிட் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர் மற்றும் 525 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன.  இதன் மூலம், செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை வார இறுதியில் மட்டுமே உயர்ந்துள்ளது.  மறுபுறம் 311 பேர் தொற்றுநோயிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இந்தியாவின் தற்போதைய செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 3618 ஆக உள்ளது, இது முந்தைய நாளை விட 212 அதிகம் ஆகும்.

மேலும் படிக்க | வேகமாக பரவும் H3N2 வைரஸ் தொற்று: அறிகுறிகள் மற்றும் தடுப்பு என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News