Oldest Pending Case: 221 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கு..!!

நாட்டின் பெரும்பாலான நீதிமன்றங்களில் எண்ணற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தற்போதைய வேகத்தில் தீர்க்கப்பட்டால், அவற்றை முடிக்க 324 ஆண்டுகள் ஆகும் என அரசாங்கத்தின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 6, 2021, 02:25 PM IST
  • நாட்டிலேயே அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள நீதிமன்றமாக கல்கத்தா உயர் நீதிமன்றம் உள்ளது
  • மிக பழமையான வழக்கு 1800 இல் பதிவு செய்யப்பட்டது
  • நாட்டின் பெரும்பாலான நீதிமன்றங்களின் நிலை இதுதான்.
Oldest Pending Case: 221 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கு..!! title=

Oldest Pending Case: நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல வழக்குகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நீதிமன்றத்தில் 221 ஆண்டுகளாக இன்னும் நிலுவையில் உள்ள நாட்டின் மிக பழமையான வழக்கு பற்றி தெரியுமா? நாட்டிலேயே அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள நீதிமன்றமாக கல்கத்தா உயர் நீதிமன்றம் உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதில் தற்போது 2.24 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 10129 வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. இந்தியாவில் 221 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஒரு வழக்கும் உள்ளது. இது நாட்டின் மிகப் பழமையான நிலுவையில் உள்ள வழக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வழக்கைப் பற்றி அறிந்து கொள்ளலா

221 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கு

கல்கத்தா உயர்நீதிமன்ற வழக்கு எண் AST/1/1800 நாட்டிலேயே நிலுவையில் உள்ள மிகப் பழமையான வழக்கு. 221 ஆண்டுகள் பழமையான இந்த வழக்கு 1800 ஆம் ஆண்டு கீழ் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் கடைசி விசாரணை 2018 நவம்பர் 20 அன்று கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன் கோப்புகள் கிட்டத்தட்ட 170 ஆண்டுகளாக கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன, அதன் பிறகு அது 1 ஜனவரி 1970 அன்று கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்றத்தில் கூட இந்த வழக்கு கடந்த 51 வருடங்களாக நிலுவையில் உள்ளது.

ALSO READ | காதலர்கள் கவனத்திற்கு! ‘இந்த’ நாடுகளில் முத்தமிட தடை; மீறினால்..!!

அனைத்து நீதிமன்றங்களிலும் இதே நிலைதான்

கல்கத்தா உயர்நீதிமன்றம் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நீதிமன்றங்கள் மோசமான நிலையில் உள்ளன. நாட்டில் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் சுமார் 56 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் 59595 வழக்குகள் 30 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. நாட்டின் மிகப்பெரிய உயர் நீதிமன்றமான அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 42764 வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலான காலம் பழமையானவை.

அனைத்து வழக்குகளையும் தீர்க்க 324 ஆண்டுகள் ஆகும்

தேசிய நீதித்துறை தரவு கட்டம் (NZG) தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 17000 மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் எள்ள வழக்குகளின் எண்ணிக்கை 89,000. நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 3.6 கோடி. இந்த வழக்குகள் தற்போதைய வேகத்தில் தீர்க்கப்பட்டால், அவற்றை முடிக்க 324 ஆண்டுகள் ஆகும் என அரசாங்கத்தின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ALSO READ | லிவ்விங் டுகெதர் ஜோடிகள் நீதிமன்றத்தை அணுக முடியாது!சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News