இலவச ரேஷன் திட்டம் 2022 மார்ச் வரை நீட்டிப்பு: மத்திய அரசு

கொரோனா வைரஸ் காலத்தில் தொடங்கப்பட்ட பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 24, 2021, 05:19 PM IST
இலவச ரேஷன் திட்டம் 2022 மார்ச் வரை நீட்டிப்பு: மத்திய அரசு title=

கடந்த 2020 மார்ச்  மாதம் கொரோனா பரவல் (Corona Pandemic) தொடங்கிய நிலையில், முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா (PM Garib Kalyan Yojana) என்னும் ஏழைகளுக்கான நலத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ரேஷனில் இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கில் மூன்று மாதங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம்,  2021 நவம்பர் மாதம்,  வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்படாது என முன்னதாக மத்திய அரசு (Central Government) அறிவித்திருந்தது.

ALSO READ | No more Farm Laws: நாடாளுமன்றத்தில் விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய மசோதா தயார்

இந்நிலையில், கொரோனா வைரஸ் காலத்தில் தொடங்கப்பட்ட பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டித்துள்ளது. இதனால், இப்போது ஏழைகளுக்கு 2022 மார்ச் வரை இலவச ரேஷன் கிடைக்கும். அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

ALSO READ | இலவச அரிசி, கோதுமை நவம்பர் 30ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது: மத்திய அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News