நொய்டாவில் அதிகரிக்கும் கொரோனா! 7 நாட்களில் 44 குழந்தைகளுக்கு கோவிட்

கொரோனா வைரஸ் பரவலால் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த 7 நாட்களில் 44 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 15, 2022, 02:12 PM IST
  • உயரும் கொரொனா பாதிப்பு
  • நொய்டாவில் 7 நாளில் 44 பேருக்கு கொரோனா
  • கொரோனா நான்காம் அலை பீதி
நொய்டாவில் அதிகரிக்கும் கொரோனா! 7 நாட்களில் 44 குழந்தைகளுக்கு கோவிட்  title=

Coronavirus: கொரோனா வைரஸ் பரவலால் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த 7 நாட்களில் 44 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர், 

நொய்டாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருவதால், மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது. கோவிட்-19 தொடர்பான விதிகளைப் பின்பற்றுமாறு மக்களை மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  

நொய்டாவில் 44 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில்: கொரோனா வைரசின் நான்காம் அலை வருகிறதா என்று மீண்டும் மக்கள் கவலைப்படுகின்றனர்.

 

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த 7 நாட்களில் 44 குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த கவலைகள் அதிகரித்துள்ளன.  

கடந்த 7 நாட்களில் 44 குழந்தைகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 16 குழந்தைகள் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அரசு மருத்துமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சுனில் குமார் சர்மா தெரிவித்தார். நொய்டாவில் மொத்தம் 167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சதவீதம் 26.3.

மேலும் படிக்க | இன்று முதல் 12-14 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி

முககவசங்களைப் பயன்படுத்த நிர்வாகம் வேண்டுகோள் 
முன்னதாக வியாழக்கிழமை (ஏப்ரல் 14), 15 குழந்தைகள் உட்பட 44  பேருக்கு புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் உறுதி செய்யப்பட்டன. மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
இந்தியா முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 949 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவானதை அடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,39,972 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையும் 11,191 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் கொரோனா தொற்று உயர்வு

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மேலும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,743 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதம் 98.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. தரவுகளின்படி, தினசரி பாதிப்பு விகிதம் 0.26 சதவீதமாகவும், வாராந்திர கொரோனா பாதிப்பு விகிதம் 0.25 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் இணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | கொரோனா ஒழிந்து விட்டது என நினைப்பது மிகப்பெரிய தவறாக இருக்கும்: ஐநா

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News