கொரோனா தடுப்பு பணி: மாநிலங்களுக்கு மேலும் ரூ.15 ஆயிரம்கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு

கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுக்கும் விதமாக மேலும் ரூ .15,000 கோடி நிதித்தொகுப்பை மத்திய அரசு மாநில அரசுக்களுக்கு அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 9, 2020, 07:10 PM IST
கொரோனா தடுப்பு பணி: மாநிலங்களுக்கு மேலும் ரூ.15 ஆயிரம்கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு title=

கொரோனா நிதி: நாட்டில் 166 உயிர்களைக் கொன்ற கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக மத்திய அரசு இன்று (வியாழக்கிழமை) மாநிலங்களுக்கு ரூ .15,000 கோடியை அனுமதித்தது.

மொத்த நிதியில் ரூ. 7, 774 கோடி கோவிட் -19 அவசரகால சேவைக்கும், மீதமுள்ளவை தொகை பயன்முறை அணுகுமுறையின் கீழ் வழங்கப்படும் நடுத்தர கால ஆதரவுக்கும் (1-4 ஆண்டுகள்) பயன்படுத்தப்படும்.

அதிகம் பாதிக்கப்பட்ட பகிதிகளில் நோயறிதலை கண்டறியவும், கோவிட் -19 பிரத்யேக சிகிச்சை வசதிகள், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளின் கொள்முதல், எதிர்காலத்தில் நோய்கள் பரவாமல் தடுப்பதற்காகவும், தேசிய மற்றும் மாநில சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற காரணங்களுக்கு செலவழிக்கபப்டும். 

நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக இந்தியா தற்போது ஏப்ரல் 14 வரை மூன்று வாரங்கள் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது.

இன்று முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணயக் கொள்கை அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால், இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கான பார்வை மாற்றப்பட்டுள்ளது எனக் கூறியது.

"கோவிட் -19 பரவுவதற்கு முன்னர், 2020-21க்கான வளர்ச்சிக்கான கண்ணோட்டம் காணப்பட்டது. கோவிட் -19 தொற்றுநோய் இந்த கண்ணோட்டத்தை கடுமையாக மாற்றியுள்ளது. பிந்தைய கணிப்புகள் குறிப்பிடுவதைப் போல, கோவிட் மூலம் உலகப் பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டில் மந்தநிலையில் மேலும் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Trending News