கர்நாடகா தார்வாட் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலி; 55 பேர் காயம்

கர்நாடகாவில் பல அடுக்கு மாடி கட்டிடம் விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் பலி; 53 பேர் பலத்த காயம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 20, 2019, 09:26 AM IST
கர்நாடகா தார்வாட் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலி; 55 பேர் காயம் title=

கர்நாடகா தார்வாட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த பல அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விபத்திற்குள்ளானது. இதில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். 53 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் தார்வாட்டில் உள்ள சிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கு 10 ஆம்புலன்ஸ்கள், 20 தீயணைப்பு அதிகாரிகள் தலைமையிலான குழு மற்றும் 5 மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த விபத்து நேற்று மாலை 3.30 மணி அளவில் நடந்துள்ளது. மீட்புப் பணிகள் இன்றும்(புதன்கிழமை) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் யாராவது இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியியுள்ளார்களா என தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதுக்குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து சரிவுக்கான காரணம் தெளிவாக இன்னும் தெரியவில்லை.

Trending News