ஆம் ஆத்மி கட்சியை விட்டு யாரும் விலக வேண்டாம் - கெஜ்ரிவால் கோரிக்கை

Last Updated : Apr 27, 2017, 06:35 PM IST
ஆம் ஆத்மி கட்சியை விட்டு யாரும் விலக வேண்டாம் - கெஜ்ரிவால் கோரிக்கை title=

டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வி ஏற்பட்டதையடுத்து யாரும் கட்சியை விட்டு செல்ல வேண்டாம் என்று கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றி பெற்றது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் கட்சி நிர்வாகிகள் சிலர் கட்சியை விட்டு விலகினர். சில எம்.எல்.ஏக்கள் கட்சியை விட்டு விலக முன்வந்துள்ளனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவசரமாக கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனை கூட்டத்தில் கெஜ்ரிவால் அனைவரிடம் யாரும் கட்சியை விட்டு விலகமாட்டேன் என உறுதிமொழி வாங்கிக்கொண்டார் என தெரிகிறது.

பாஜக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை வாங்க முயற்ச்சிக்கிறது. அவர்கள் 10 கோடி ரூபாய் கூட வழங்கலாம் அவர்களிடம்  நீங்கள் விலைபோகக்கூடாது. நீங்கள் எங்களை ஏமாற்றுவது என்பது கடவுளை ஏமாற்றுவதற்கு சமம்.

கட்சியை விட்டு விலகமாட்டேன் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என அந்த கூட்டத்தில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Trending News