தில்லி NCR - பகுதியில் நிலநடுக்கம்! பதற்றத்தில் மக்கள்!

Earthquake: டெல்லி-என்சிஆர் பகுதியில் வியாழன் மாலை வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. வாரத்தில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 5, 2023, 08:49 PM IST
  • ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் 200 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
  • டெல்லி-என்சிஆர் பகுதியில் நிலநடுக்கத்தின் வலுவான நடுக்கம் உணரப்பட்டது.
தில்லி NCR - பகுதியில் நிலநடுக்கம்! பதற்றத்தில் மக்கள்! title=

இந்தியாவில் நிலநடுக்கம்: டெல்லி-என்சிஆர் பகுதியில் வியாழன் மாலை வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லி-என்சிஆர் பகுதியில் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீரிலும் மாலை 7:56 மணிக்கு பூமி அதிர்ந்தது. நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானில் என சொல்லப்படுகிறது. அதன் தீவிரம் ரிக்டர் அளவில் 5.9 ஆக இருந்தது. நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் 200 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். இதற்கு முன்பும், டெல்லி-என்சிஆர் பகுதியில் நிலநடுக்கத்தின் வலுவான நடுக்கம் உணரப்பட்டது. 

புத்தாண்டு இரவிலும் டெல்லி-என்சிஆர் பகுதியில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) என்பது இந்திய அரசின் நோடல் ஏஜென்சி ஆகும், இது நாடு முழுவதும் நிலநடுக்க நடவடிக்கைகளை கண்காணிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை புத்தாண்டு இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜார் ஆகும். அது தரையில் இருந்து 5 கிலோமீட்டர் ஆழத்தில் வந்தது. முன்னதாக நவம்பர் 12ஆம் தேதியன்று டெல்லி-என்சிஆர் நிலம் நிலநடுக்கத்தால் அதிர்ந்தது. NCS அளித்துள்ள தகவலின் படி, இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக இருந்தது. அதன் மையம் நேபாளம். மேலும் அது பூமியியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் வந்தது.

மேலும் படிக்க | போதையில் பெண் மீது சிறுநீர் கழித்த பயணிக்கு 30 நாள் தடை விதித்தது ஏர் இந்தியா!

டெல்லி-என்சிஆர் பகுதியில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டால், பெரிய அளவில் சேதம் ஏற்படலாம், இதனை மதிப்பிடுவது கடினம். தற்போது ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பூமி குலுங்கியதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தவிர, டிசம்பர் 27-28 இரவு, நேபாளத்திலிருந்து உத்தர்காசி வரை நிலநடுக்கத்தின் அதிர்வுகளை மக்கள் பலமுறை உணர்ந்தனர். முதல் அதிர்ச்சி நேபாளத்தின் பாக்லுங் நகரில் உணரப்பட்டது. இதற்குப் பிறகு, குங்காவில் இரண்டாவது அடி உணரப்பட்டது. அதன் தீவிரம் 5.3 ஆக இருந்தது.

மேலும் படிக்க | கொடூர விபத்து! விமான இன்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்த பணியாளர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News