மனைவி, மகள்களை கொன்று fridge-ல் பதப்படுத்திய அலகாபாத் ஆண்!

உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில், 5 பேர் கொண்ட குடும்பம் ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2018, 01:46 PM IST
மனைவி, மகள்களை கொன்று fridge-ல் பதப்படுத்திய அலகாபாத் ஆண்! title=

உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில், 5 பேர் கொண்ட குடும்பம் ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது!

உத்திர பிரதேச மாநிலம் அலகாப்பினை சேர்ந்தவர் மனோஜ் குஷ்வாகா. பூட்டப்பட்ட இவரது வீட்டில் இருந்து நேற்று இவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியி வசிக்கும் துன்மன்கன்ஜ் கொடுத்து புகாரின் பேரில் சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர், மனோஜ் குஷ்வாகா தன் வீட்டு மீன்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதை அறிந்துள்ளனர். அவர் இறப்பதற்கு முன்னதாக தன் மனைவி மற்றும் 3 மகள்களை கொன்று, வீட்டின் குளிர்சாதனப் பெட்டியிலும், அலமாரியிலும் வைத்துள்ளார்.

சடலங்களை மீட்டெடுத்த காவல்துறையினர், சடலங்களை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளதாக காவல்துறை அதிகாரி நிதின் திவாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த மரணத்தில் மர்மங்கள் சூழ்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாதக டெல்லியின் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் நாடுமுழுவதிலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் இதேப்போன்ற சம்பவம் அலகாபாத்தில் தற்போது நிகழ்ந்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Trending News