காங்கிரசார் பெயருக்கு முன்னால் பப்பு.... அரியானா அமைச்சர்

பாஜக-வினர் தங்கள் பெயரின் முன்னால் ‘சவுகிதார்’ என்று போட்டுள்ளதைப்போல் காங்கிரசார் பப்பு என சேர்த்துக் கொள்ளுங்கள் என அரியானா அமைச்சர் தெரிவித்துள்ளார்!

Last Updated : Mar 19, 2019, 04:54 PM IST
காங்கிரசார் பெயருக்கு முன்னால் பப்பு.... அரியானா அமைச்சர் title=

பாஜக-வினர் தங்கள் பெயரின் முன்னால் ‘சவுகிதார்’ என்று போட்டுள்ளதைப்போல் காங்கிரசார் பப்பு என சேர்த்துக் கொள்ளுங்கள் என அரியானா அமைச்சர் தெரிவித்துள்ளார்!

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார். மேலும் அந்த பதிவில் "உங்கள் காவலன் தேசத்துடன் இணைந்து நிற்கிறார். தான் தனி ஆள் இல்லை. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்" என குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் சவுகிதார்(காவலன்) நரேந்திர மோடி என்று மாற்றம் செய்துள்ளார்.

இதேபோல் பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக-வை சேர்ந்த முதல் அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பாஜக பிரமுகர்களும் தங்களது டுவிட்டர் கணக்குகளில் தங்களது பெயர்களுக்கு முன்னால் சவுகிதார் என்ற முன்னெட்டை இணைத்துள்ளனர். இதை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக-வை சேர்ந்த அரியானா மாநில அமைச்சர் அனில் விஜ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரசாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘எங்களுக்கு பிடித்திருப்பதால் எங்கள் பெயர்களுக்கு முன்னால் சவுகிதார் என்னும் அடைமொழியை நாங்கள் சேர்த்திருக்கிறோம். 

உங்களுக்கும் தேவைப்பட்டால் ‘பப்பு’ (மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் 'ஏதுமறியாக சிறுவன்' என்பதை குறிக்கும் வகையில் சில வேளைகளில் ராகுல் காந்தியை ‘பப்பு’ என்று குறிப்பிடுவதுண்டு) என்ற அடைமொழியை உங்கள் பெயர்களுக்கு முன்னால் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார்

Trending News