சர்வதேச சமூகம் தலையிடாவிட்டால் டெல்லி போல் உலகமும் எரியும் -இம்ரான் கான்!

சர்வதேச சமூகம் தலையிடாவிட்டால் டெல்லி போல் உலகமும் பேரழிவை சந்திக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Last Updated : Feb 29, 2020, 05:51 PM IST
சர்வதேச சமூகம் தலையிடாவிட்டால் டெல்லி போல் உலகமும் எரியும் -இம்ரான் கான்! title=

சர்வதேச சமூகம் தலையிடாவிட்டால் டெல்லி போல் உலகமும் பேரழிவை சந்திக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "சர்வதேச சமூகம் தலையிடாவிட்டால் இந்த முன்னேற்றங்கள் பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, இறுதியில் உலகிற்கும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் கணித்துள்ளேன்.

டெல்லி முஸ்லிம்களின் படுகொலைகளில், காவல்துறை மற்றும் RSS கும்பல்கள் மூலம் அரசு நிதியளிக்கும் பயங்கரவாதம் 200 மில்லியன் இந்திய முஸ்லிம்களை தீவிரமயமாக்க வழிவகுக்கும். அதேபோல் காஷ்மீர் இளைஞர்கள் இந்திய ஆக்கிரமிப்பு படைகளின் அடக்குமுறை மற்றும் கிட்டத்தட்ட 100,000 காஷ்மீரிகளின் மரணங்கள் மூலம் தீவிரமயமாக்கப்பட்டுள்ளனர்." என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய வன்முறை இதுவரை 42 பேரைக் கொன்றுள்ளது. சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை மேலும் நான்கு இறப்புகளை உறுதிப்படுத்திய நிலையில் டெல்லி வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 42-ஆக உயர்ந்தது, வியாழக்கிழமை வரை எண்ணிக்கை 38-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவற்றில் - ஒரு புலனாய்வு பணியக ஜவான் மற்றும் டெல்லி காவல்துறை தலைமை கான்ஸ்டபிள் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

GTP மருத்துவமனையின் CMO தகவல்படி, இந்த மருத்துவமனையில் 239 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதிய சேர்க்கை உட்பட, அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் தற்போதைய எண்ணிக்கை 45 ஆக உள்ளது, அவர்களில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ளனர்.

வடகிழக்கு டெல்லியின் சில கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை கடைகள் திறக்கப்பட்டன.

டெல்லி காவல்துறையினர் வடகிழக்கு டெல்லி கலவர விசாரணையை குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளனர், மேலும் இந்த வழக்குகளை இப்போது இரண்டு சிறப்பு புலனாய்வு குழுக்கள் (SIT) விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு டெல்லி வகுப்புவாத வன்முறை தொடர்பாக இதுவரை மொத்தம் 123 FIR பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் சுமார் 623 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை அறிக்கை தெரிவிக்கின்றது.

Trending News