J&K: ஆனந்த்நாக் பகுதியில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சுட்டுக்கொலை....

ஜம்மு மற்றும் காஷ்மீர் அனந்தநாக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சுட்டுக்கொலை....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 8, 2018, 10:11 AM IST
J&K: ஆனந்த்நாக் பகுதியில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சுட்டுக்கொலை.... title=

ஜம்மு மற்றும் காஷ்மீர் அனந்தநாக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சுட்டுக்கொலை....

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் மாவட்டம் அச்சாபால் (Achabal) பகுதியில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.  

அப்போது,அப்போது, தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தி உள்ளனர். பல மணி பெற போராட்டத்திற்கு பின்னர் பாதுகாப்புப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் உயிரிழந்தான். இந்தத் துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 

மேலும், அப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக அறிந்த பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் பணியில் பாதுகப்புபடியினர் ஈடுபட்டுவருகின்றனர். 

 

Trending News