RBI Monetary Policy: வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை; பிற முக்கிய அம்சங்கள்

ரிசர்வ் வங்கி இன்று தனது நிதி நிலைக் கொள்கையை அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை இதனை அறிவித்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 6, 2021, 11:44 AM IST
RBI Monetary Policy: வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை; பிற முக்கிய அம்சங்கள் title=

 

ரிசர்வ் வங்கி (RBI) இன்று தனது நிதி நிலைக் கொள்கையை அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை இதனை அறிவித்தார். ரெபோ வட்டி விகிதம் 4 சதவீதம் என்ற அளவில் மாறாமல் உள்ளது.  ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாறாமல் உள்ளது. நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) தொடர்ச்சியாக இது ஏழாவது முறையாக வட்டி விகிதங்கள் எதையும் மாற்றாமல் உள்ளது

இன்று ரிசர்வ் வங்கியின் நிதிநிலைக் கொள்கை தொடர்பான RBI கவர்னர் உரையின் சிறப்பம்சங்கள்

* நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சிக்கான மதிப்பீட்டை ரிசர்வ் வங்கி 9.5 சதவிகிதமாக உள்ளது.

* இந்திய ரிசர்வ் வங்கி இன்று, வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம், அதாவது ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் 4 சதவிகிதமாக உள்ளது.

ALSO READ | New RBI Rules: வங்கி துறையில் ஊதியம், பென்ஷன், EMI தொடர்பான புதிய விதிகள் அமல்

 

* வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரிவர்ஸ் ரெப்போ விகிதத்த்திலும் மாற்றம் ஏதும் இல்லாமல் 3.35 சதவீதமாக உள்ளது.

* நடப்பு நிதியாண்டின் உண்மையான ஜிடிபி (GDP) வளர்ச்சி முதலாவது காலாண்டில் (Q1) 21.4 %, இரண்டாவது காலாண்டில் (Q2) 7.3 %, மூன்றாவது காலாண்டில் (Q3) 6.3 % மற்றும் நான்காவது காலாண்டில் (Q4) 6.1 % என்ற அளவிலும் உள்ளது ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறினார்.

* ரிசர்வ் வங்கி 2021-2022 நிதி ஆண்டிற்கான சிபிஐ பணவீக்க மதிப்பீடு 5.1 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான CPI பணவீக்கம் 5.1 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

* "ஜூன் 2021 உடன் ஒப்பிடும்போது நிலைமை மேம்பட்டுள்ளது. ஆனால் கோவிட் -19  தொற்று மூன்றாவது அலைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதல் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் கூறினார்.

* "ஜூன் மாதத்தில் நிதி நிலைக் கொள்கைக் குழுவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பொருளாதார நடவடிக்கைகள் மேம்ப்பட்டு வருகிறது. COVID-19  இரண்டாம் அலை ஏற்படுத்திய பின்னடைவில் இருந்து பொருளாதாரம் மீண்டு வருகிறது" என்று RBI ஆளுநர் கூறினார்.

முன்னதாக, இரண்டாவது கொரோனா அலையின் தாக்கத்தின் காரணமாக முந்தைய நிதியாண்டில் 10.5 சதவிகிதமாக மதிப்பீடு செய்யப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீட்டை நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கி 9.5 சதவீதமாகக் குறைத்தது.

ALSO READ | RBI Employment: ரிசர்வ் வங்கியில் வேலை, ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News