நாட்டை மீட்க மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும்! - ப.சிதம்பரம்

பொரளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்க மன்மோகன் சிங்கின் ஆலோசனையை கேட்க மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்..!

Last Updated : Sep 26, 2019, 12:56 PM IST
நாட்டை மீட்க மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும்! - ப.சிதம்பரம்  title=

பொரளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்க மன்மோகன் சிங்கின் ஆலோசனையை கேட்க மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்..!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர்   ப.சிதம்பரம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார மந்த நிலையை சரி செய்ய மன்மோகன் சிங் அளித்த ஆலோசனைகளை அரசு செயல்படுத்த வேண்டும் என ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.

INX மீடியா வழக்கில் அமலாக்கத்துரையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இவரது சார்பில் இவரின் குடும்பத்தினர்கள் பதிவிடுவதாக கூறி தினம் ஒரு டுவீட் பதிவிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து கூறியும், அவரை புகழ்ந்தும் ப.சிதம்பரம் சார்பில் கருத்து பதிவிடப்பட்டுள்ளது.

அதில், "மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் 100 ஆண்டுகளுக்கும் வாழ வாழ்த்துகிறேன். மன்மோகன் சிங்கின் யோசனைகளை கேட்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன். தற்போதைய பொருளாதார சரிவில் இருந்து மீட்கும் சரியான வழியை ஒருவரால் காட்ட முடியும் என்றால், அது மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும். 

பொருளாதார சரிவிற்கான முக்கியமான காரண காரணி என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் அரசு செயல்பாடுகளில் இருக்கும் அடிப்படை தவறு. தேவையில் உள்ள குறைபாடு, வேலைவாய்ப்பு, சம்பளம், வாய்ப்புக்கள் ஆகியவற்றின் வளர்ச்சி மீதான அவநம்பிக்கை ஆகியன பெரிய பிரச்னையாக உள்ளது" என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.  

 

Trending News