ஜவுளி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் கருகி பலி!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே ஜவுளி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் கருகி பலி!!

Last Updated : May 9, 2019, 09:43 AM IST
ஜவுளி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள்  உடல் கருகி பலி! title=

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே ஜவுளி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் கருகி பலி!!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள உருளி தேவாச்சி கிராமத்தில் ஜவுளி குடோன் உள்ளது. இந்த குடோனின் ஒரு பகுதியில் இன்று அதிகாலை தீப்பிடித்தது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவெனப் பரவியது. துணி பண்டல்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் குடோனில் வேலைசெய்த தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றி உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களில் சென்று கடுமையாகப் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் கருகி சாம்பலாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Trending News