டெல்லி ஷ்ரத்தா கொலை இன்ஸ்பிரேஷன்... அதே ஸ்டைலில் காதலி கொலை.. சிக்கியது எப்படி?

டெல்லி ஷ்ரத்தா கொலையால் தூண்டப்பட்டு, தனது லிவ்-இன் காதலியை ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 3, 2022, 11:43 AM IST
  • கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.
  • கொலை செய்தவருக்கு ஏற்கெனவே, வேறு ஒருவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
டெல்லி ஷ்ரத்தா கொலை இன்ஸ்பிரேஷன்... அதே ஸ்டைலில் காதலி கொலை.. சிக்கியது எப்படி? title=

லிவ்-இன் உறவில் இருந்த தனது காதலியை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் பதப்படுத்திவைத்த சம்பவம், மகன் - தாய் இணைந்து தந்தையை 22 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் பதப்படுத்திவைத்த சம்பவம் என டெல்லியே தற்போது கொடூரமாக சம்பவங்களின் உறவிடம் போல காட்சியளிக்கிறது. 

அந்த வகையில், டெல்லியில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு டெல்லியின் கணேஷ் நகர் பகுதியில் வசித்து வரும், பஞ்சாபை சேர்ந்த 45 வயதான மன்பிரீத், தன்னுடன் லிவ்-இன் உறவில் இருந்த 35 வயது பெண்ணை கொலை செய்து பல துண்டுகளாக வெட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த நபரை போலீசார் கைதுசெய்த நிலையில், டெல்லியில் நடந்த ஷ்ரத்தா கொலைதான், இந்த கொலைக்கும் தூண்டுகோளாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலைச்செய்யப்பட்ட பெண் ரேக்கா ராணியின் உடலை, அவர்கள் வசித்து வந்த கணேஷ் நகர் வாடகை வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.  

மேலும் படிக்க | இப்படி இருந்தால் இந்துக்களால் எப்படி குழந்தை பெற முடியும்? - இஸ்லாமிய தலைவரின் சர்ச்சை கருத்து

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,"மன்பிரீத்திற்கு வேறு ஒருவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2015ஆம் ஆண்டு முதல் ரேக்காவுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருக்கிறார். அவர்கள் கணேஷ் நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர்.  ஆனால், ஒரு சில ஆண்டுகளிலேயே இந்த உறவில் மாட்டிக்கொண்டதாக மன்பிரீத் நினைத்துள்ளார். எனவே, உறவில் இருந்து தப்பிக்க அவர்களை கொலை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். 

இதையடுத்து, கடந்த டிச. 1ஆம் தேதி முதல், ரேக்காவின் 16 வயது மகளுக்கு தூக்க மருத்து கொடுத்துள்ளார். அவர் மயங்கி பின்னர், தான் கொலை செய்ய கொண்டு வந்திருந்த கத்தியை வைத்து ரேக்காவை கொலை செய்து, பல துண்டுகளாக வெட்டியுள்ளார். அவரின் மோதிர விரலையும் தனியாக வெட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றார். மன்பிரீத் மீது ஏற்கெனவே, பல கொலை மற்றும் கடத்தல் வழக்குகள் இருக்கிறது" என்று தெரிவித்தனர். 

தொடர்ந்து, ரேக்கா ராணியின் மகள் கொடுத்த புகாரை அடுத்து, மன்பிரீத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளியை வெறும் 12 மணிநேரங்களில் தேடிக்கண்டுபிடித்த போலீசார், அவரை பஞ்சாபில் வைத்து கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

மேலும் படிக்க | மணமேடையில் மாப்பிள்ளை கொடுத்த முத்தம்... திருமணம் நிறுத்தம் - பந்தயத்தால் சங்கடம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News